sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தற்கொலை செய்த பெண் உடல்  கணவர் வீட்டின் முன் அடக்கம்

/

தற்கொலை செய்த பெண் உடல்  கணவர் வீட்டின் முன் அடக்கம்

தற்கொலை செய்த பெண் உடல்  கணவர் வீட்டின் முன் அடக்கம்

தற்கொலை செய்த பெண் உடல்  கணவர் வீட்டின் முன் அடக்கம்


ADDED : ஆக 27, 2024 05:08 AM

Google News

ADDED : ஆக 27, 2024 05:08 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோலார் : வரதட்சணை கொடுமையால் தற்கொலை செய்து கொண்ட புதுபெண்ணின் உடல், கணவர் வீட்டின் முன் அடக்கம் செய்யப்பட்டது.

கோலார் அருகே வசித்தவர் மானசா, 24. இவருக்கும், துரண்டஹள்ளி கிராமத்தின் உல்லாஸ், 26 என்பவருக்கும் கடந்த ஆண்டு திருமணம் நடந்தது. கூடுதல் வரதட்சணை கேட்டு மானசாவை, கணவரும், அவரது குடும்பத்தினரும் கொடுமைப்படுத்தினர். ஊர் பெரியவர்கள் பஞ்சாயத்து நடத்தியும் பலன் இல்லை.

மானசா, பெற்றோர் வீட்டில் வசித்தார். விவாகரத்து கேட்டு, அவருக்கு கணவர் நோட்டீஸ் அனுப்பினார். மனம் உடைந்த மானசா 24ம் தேதி இரவு வீட்டில் துாக்கிட்டுத் தற்கொலை செய்து கொண்டார்.

மானசாவின் பெற்றோர் அளித்த புகாரில் உல்லாஸ், அவரது பெற்றோர் மீது கோலார் ரூரல் போலீசார் வழக்குப் பதிவு செய்தனர். அவர்கள் தலைமறைவாகி விட்டனர். நேற்று முன்தினம் மாலையில், பிரேத பரிசோதனை செய்யப்பட்ட மானசா உடல், குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. உல்லாஸ் வீட்டிற்கு எடுத்து சென்றனர். அவரது வீட்டின் அருகே குழிதோண்டி உடலை அடக்கம் செய்தனர்.






      Dinamalar
      Follow us