sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

காரின் உள்ளே இருந்து கதவை லாக் செய்த சிறுவன் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு

/

காரின் உள்ளே இருந்து கதவை லாக் செய்த சிறுவன் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு

காரின் உள்ளே இருந்து கதவை லாக் செய்த சிறுவன் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு

காரின் உள்ளே இருந்து கதவை லாக் செய்த சிறுவன் ஒரு மணி நேர போராட்டத்திற்கு பின் மீட்பு


ADDED : ஜூலை 10, 2024 02:22 AM

Google News

ADDED : ஜூலை 10, 2024 02:22 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

திருவனந்தபுரம்:காருக்குள் சிக்கிய இரண்டு வயது குழந்தை ஒரு மணி நேர பரபரப்புக்கு பின் மீட்கப்பட்டது.

கேரள மாநிலம் திருவனந்தபுரம் வெங்கானுாரை சேர்ந்தவர் நந்து. மனைவி ரோகினி. இவர்களது இரண்டு வயது மகன் ஆரவ். சம்பவத்தன்று குழந்தையை காருக்குள் அமர்த்தி விட்டு நந்து காரை கழுவிக் கொண்டிருந்தார்.

காருக்குள் விளையாடிக் கொண்டிருந்த குழந்தை திடீரென சாவியில் இருந்த கார் லாக் பட்டனை அழுத்தியதால் கதவுகளை திறக்க முடியாத நிலை ஏற்பட்டது.

இது குறித்து திருவனந்தபுரம் தீயணைப்பு நிலையத்துக்கு தகவல் தெரிவிக்கப்பட்டு தீயணைப்பு வீரர்கள் வந்து பல்வேறு சைகைகள் மூலம் குழந்தையின் கையில் இருந்த சாவியில் திறக்கும் பட்டனை அழுத்த முயற்சி மேற்கொண்டனர். எனினும் அது பலன் அளிக்கவில்லை.

கார் ஏர்பேக் அமைப்பைக் கொண்டதால் கண்ணாடியை உடைக்கும் போது குழந்தையின் உயிருக்கு ஆபத்து ஏற்படலாம் என்பதால் தீயணைப்புத் துறையினர் அந்த முயற்சியையும் கைவிட்டனர்.

இறுதியில் மாற்று சாவி கண்டுபிடிக்கப்பட்டு ஒரு மணி நேரத்துக்கு பின் கார் திறக்கப்பட்டு குழந்தை மீட்கப்பட்டது. அதன் பிறகே பெற்றோர் நிம்மதி அடைந்தனர்.






      Dinamalar
      Follow us