sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, டிசம்பர் 21, 2025 ,மார்கழி 6, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சாமுண்டீஸ்வரி கோவிலில் குவிந்த பக்தர்கள் வெள்ளம்

/

சாமுண்டீஸ்வரி கோவிலில் குவிந்த பக்தர்கள் வெள்ளம்

சாமுண்டீஸ்வரி கோவிலில் குவிந்த பக்தர்கள் வெள்ளம்

சாமுண்டீஸ்வரி கோவிலில் குவிந்த பக்தர்கள் வெள்ளம்


ADDED : ஜூலை 13, 2024 04:31 AM

Google News

ADDED : ஜூலை 13, 2024 04:31 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மைசூரு : ஆஷாடா கன்னட மாதத்தின் முதல் வெள்ளிக்கிழமையை ஒட்டி, மைசூரு சாமுண்டீஸ்வரி கோவிலில் நேற்று ஏராளமான பக்தர்கள், 3 முதல் 4 மணி நேரம் காத்திருந்து, அம்மனை தரிசனம் செய்தனர்.

கர்நாடகாவில் ஆஷாடா கன்னட மாதம் என்றாலே அம்மன் கோவில்களில் மிகவும் விசேஷம். அதுவும் ஆஷாடா மாதத்தின் அனைத்து வெள்ளிக்கிழமைகளிலும் மைசூரு சாமுண்டிஸ்வரி கோவிலில் சிறப்பு வழிபாடு நடக்கும்.

இந்த வகையில், இந்தாண்டின் ஆஷாடா மாதத்தின் முதல் வெள்ளிக் கிழமையான நேற்று, சாமுண்டீஸ்வரி கோவிலில் சிறப்பு பூஜைகள் நடந்தன. கோவில் வளாகம் முழுதும் வண்ண வண்ண மலர்களால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.

கருவூலத்தின் நுழைவு பகுதியில், 'அம்மா' என்று மலர்களால் வடிவமைக்கப்பட்டிருந்தது. கோவில் கோபுரம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.

அம்மனுக்கு அதிகாலையே அபிஷேகம் செய்யப்பட்டு, நீல வண்ண பட்டுப்புடவை உடுத்தி, சிறப்பு அலங்காரம் செய்யப்பட்டது. காலை முதல், இரவு வரை பக்தர்கள் வந்த வண்ணம் இருந்தனர். சாமுண்டி மலை அடி வாரத்திலேயே வாகனங்கள் நிறுத்தப்பட்டன. லலித் மஹால் ஹெலிபேட் பகுதியில் இருந்து, மலை உச்சிக்கு செல்வதற்கு இலவச பஸ் வசதி செய்யப்பட்டிருந்தது.

அம்மனை தரிசிக்க நீண்ட வரிசையில் பக்தர்கள் காத்திருந்தனர். 3 மணி முதல் 4 மணி நேரம் வரிசையில் காத்திருந்து அம்மனை தரிசித்தனர். நீண்ட வரிசையில் நிற்க முடியாதவர்கள், 100, 300 ரூபாய் கட்டணம் செலுத்தி சிறப்பு தரிசனம் செய்தனர். அவர்களும் 2 மணி நேரம் காத்திருந்தனர்.

எங்கு பார்த்தாலும் பக்தர்களின் கூட்டம் அலை மோதியது. அசம்பாவித சம்பவங்கள் நடக்காதவாறு பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.






      Dinamalar
      Follow us