ADDED : மே 12, 2024 09:46 PM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
சிக்கமகளூரு: காட்டெருமைகள் கூட்டம் கிராமத்தில் நுழைந்துள்ளதால் மக்கள் பீதியடைந்துள்ளனர்.
சிக்கமகளூரு, கலசாவின், தோடதுாரு கிராம பஞ்சாயத்துக்கு உட்பட்ட கோரசுடிகே, தோடதுாரு கிராமங்களில் காட்டெருமைகளின் தொந்தவு அதிகரித்துள்ளது. நேற்று காலை காட்டெருமைகள் கூட்டம், தோடதுாரு கிராமத்தில் நுழைந்தன.
காப்பி தோட்டங்களில் நுழைந்து, பயிர்களை மிதித்து நாசமாக்கின. தோட்டத்துக்கு பணிக்கு செல்லவே, தொழிலாளர்கள் தயங்குகின்றனர். தொழிலாளர்கள் வராததால், காப்பி விவசாயிகள் நெருக்கடியில் சிக்கியுள்ளனர்.
வனத்துறையினருக்கு தகவல் கொடுத்து, காட்டெருமைகளை விரட்டும்படி மன்றாடுகின்றனர். காப்பி தோட்டத்தில் முகாமிட்டுள்ள காட்டெருமைகள், எப்போது குடியிருப்பு பகுதிகளுக்குள் நுழையுமோ என, கிராமத்தினர் அச்சத்தில் உள்ளனர்.