sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 07, 2025 ,புரட்டாசி 21, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நகைக்கடையில் கொள்ளை முக்கிய குற்றவாளி கைது

/

நகைக்கடையில் கொள்ளை முக்கிய குற்றவாளி கைது

நகைக்கடையில் கொள்ளை முக்கிய குற்றவாளி கைது

நகைக்கடையில் கொள்ளை முக்கிய குற்றவாளி கைது


ADDED : ஜூலை 17, 2024 09:10 PM

Google News

ADDED : ஜூலை 17, 2024 09:10 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ரோகினி: தெலங்கானா நகைக்கடையில் 4 கிலோ தங்கத்தை கொள்ளையடித்த நபரை டில்லி போலீசார் கைது செய்தனர்.

கடந்த 2023 டிசம்பர் 1ல், தெலங்கானா மாநிலத்தில் உள்ள ஒரு நகைக்கடையில் ஒரு கும்பல் துப்பாக்கிமுனையில் நான்கு கிலோ தங்கம், பணத்தை கொள்ளையடித்தது. சம்பவத்தின்போது, கொள்ளையர்கள் சுட்டதில், இரண்டு நகைக்கடைக்காரர்களுக்கு குண்டடி காயங்கள் ஏற்பட்டன.

இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர். கொள்ளையர்கள் டில்லியில் பதுங்கியிருப்பது தெரிய வந்தது.

தெலங்கானா போலீசார், டில்லிக்கு வந்தனர். டில்லி போலீஸ் உதவியுடன் கொள்ளைக்கும்பல் பதுங்கியிருந்த ரோகினி செக்டார் 34 பகுதியை சுற்றி வளைத்தனர். முக்கிய குற்றவாளியான சுமித் தாகர் என்பவரை போலீசார் கைது செய்தனர்.

சுமித், 2019ல் கொலை வழக்கில் கைது செய்யப்பட்டு, சிறையில் அடைக்கப்பட்டார். பரோலில் விடுதலையான அவர், தெலங்கானா சென்று உறவினர்கள் வீட்டில் பதுங்கியுள்ளார். அப்போது அவர்களுடன் இணைந்து நகைக்கடையில் கொள்ளையடித்தது விசாரணையில் தெரிய வந்தது.






      Dinamalar
      Follow us