sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பக்கத்து வீட்டு பெண்ணை கொலை செய்தவர் கைது

/

பக்கத்து வீட்டு பெண்ணை கொலை செய்தவர் கைது

பக்கத்து வீட்டு பெண்ணை கொலை செய்தவர் கைது

பக்கத்து வீட்டு பெண்ணை கொலை செய்தவர் கைது


ADDED : செப் 11, 2024 09:29 PM

Google News

ADDED : செப் 11, 2024 09:29 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:கிழக்கு டில்லி திரிலோக்புரியில் பெண்ணைக் கத்தியால் குத்திக் கொலை செய்தவரை போலீசார் கைது செய்தனர்..

திரிலோக்புரியில் வசித்தவர் ரேகா,40. வீட்டு வேலை செய்து வந்தார். இவரது பக்கத்து வீட்டில் வசிப்பவர் சுரேஷ் குமார், 40. டிரைவர். நேற்று காலை ரேகா வீட்டுக்குள் வந்த சுரேஷ் குமார்,48, கத்தியால் ரேகாவை சரமாரியாகக் குத்தி விட்டு தப்பி ஓடினார்.

ரத்த வெள்ளத்தில் சரிந்த மனைவியை அவரது கணவர், எல்.பி.எஸ்., மருத்துவமனைக்கு தூக்கிச் சென்றார். பரிசோதனை செய்த டாக்டர்கள், ரேகா ஏற்கனவே மரணம் அடைந்து விட்டதை உறுதி செய்தனர். மேலும், போலீசுக்கும் தகவல் தெரிவித்தனர்.

விரைந்து வந்த போலீசார் விசாரணை நடத்தி வழக்குப் பதிவு செய்தனர். மேலும், கொலை நடந்த இடத்திலும் ஆய்வு செய்தனர்.

அந்தப் பகுதியில் இருந்த கண்காணிப்புக் கேமராக்களில் பதிவாகி இருந்த காட்சிகளை ஆய்வு செய்தனர்.

ரேகா வீட்டுக்குள் சுரேஷ் குமார் செல்வதும் சற்று நேரத்தில் வெளியே ஓடி வருவதும் பதிவாகி இருந்தது. சுரேஷ் குமாரை கைது செய்த போலீசார் அவரிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us