sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நண்பர் குத்தி கொன்றவர் கைது

/

நண்பர் குத்தி கொன்றவர் கைது

நண்பர் குத்தி கொன்றவர் கைது

நண்பர் குத்தி கொன்றவர் கைது


ADDED : மே 12, 2024 07:11 AM

Google News

ADDED : மே 12, 2024 07:11 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஸ்ரீராமபுரம்: கொடுத்த கடனை திருப்பி கேட்டு ஆபாசமாக திட்டிய நண்பரை கொன்றவர் கைது செய்யப்பட்டார்.

பெங்களூரு ஸ்ரீராமபுரம் ஓக்லிபுரம் சுரங்கப்பாதை அருகில் மே 1ம் தேதி அழுகிய நிலையில் ஆண் சடலம் கிடந்தது. விசாரணை நடத்திய ஸ்ரீராமபுரம் போலீசார், இறந்தவர் திலிப், 34, பைக் மெக்கானிக் என்பதை கண்டறிந்தனர்.

இது தொடர்பாக நடத்திய விசாரணையில் அவரது நண்பர் விட்டல், 45, என்பவரை கைது செய்தனர்.

விசாரணை குறித்து ஸ்ரீராமபுரம் போலீசார் கூறியதாவது:

திலிப்பிடம், விட்டல், 20,000 ரூபாய் கடன் வாங்கியிருந்தார். இந்த பணத்தை பலமுறை கேட்டும் அவர் கொடுக்கவில்லை. இதனால் கோபமடைந்த திலிப், விட்டலை ஆபாசமாக திட்டி உள்ளார்.

அவமானமடைந்த விட்டல், ஏப்., 28 ம் தேதி இரவு, பணத்தை தருவதாக கூறி, ஓக்லிபுரம் சுரங்கப்பாதைக்கு வரவழைத்துள்ளார்.

அங்கு வந்த திலிப்பின் முகத்தில் உப்பு துாளை வீசி, கழுத்து, மார்பு பகுதியில் கத்தியால் குத்தி கொலை செய்து விட்டு, விட்டல் தப்பியோடி உள்ளார்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us