sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், அக்டோபர் 28, 2025 ,ஐப்பசி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஓட்டு போட்டதும் மூதாட்டி மரணம்

/

ஓட்டு போட்டதும் மூதாட்டி மரணம்

ஓட்டு போட்டதும் மூதாட்டி மரணம்

ஓட்டு போட்டதும் மூதாட்டி மரணம்


ADDED : ஏப் 18, 2024 04:13 AM

Google News

ADDED : ஏப் 18, 2024 04:13 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

உடுப்பி : உடுப்பியில் வீட்டில் இருந்து ஓட்டு போட்ட சிறிது நேரத்தில் 83 வயது மூதாட்டி, மருத்துவமனையில் மரணமடைந்தார்.

கர்நாடகாவில் 85 வயதுக்கு மேற்பட்டோர், மாற்றுத் திறனாளிகளுக்கு வசதியாக, வீட்டில் இருந்து ஓட்டு போடும் வசதியை தேர்தல் கமிஷன் செய்து உள்ளது.

அதன்படி, மாநிலம் முழுதும் கடந்த 13ம் தேதி முதல் வீட்டில் இருந்து ஓட்டு போடும் பணிகள் நடந்து வருகின்றன. இன்று இப்பணி முடிவடைகிறது.

உடுப்பி மாவட்டம்,பிரம்மாவரத்தின் பாண்டேஸ்வர் சதகாரா அக்ரஹாராவில் வசித்து வந்தவர் யசோதா நாராயண் உபத்யாய், 83. வீட்டில் இருந்து ஓட்டுப்பதிவு செய்யவிண்ணப்பித்திருந்தார்.

இதன்படி, நேற்று முன்தினம் இவரது வீட்டுக்கு தேர்தல் அதிகாரிகள் சென்றனர். ஓட்டு போட பணிகள் செய்து கொண்டிருக்கும் போதே, நெஞ்சு வலிப்பதாக மூதாட்டி தெரிவித்தார்.

உடனடியாக மருத்துவமனைக்கு செல்லலாம் என கூறியும், 'இல்லை. நான் ஓட்டு போட்ட பின் செல்கிறேன்' என கூறிய பின், ஓட்டு போட்டார்.

பின், அவரை அருகில் உள்ள மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர். ஆனால் சிகிச்சை பலனின்றி, நேற்று முன்தினம் இரவு 9:00 மணியளவில் உயிரிழந்தார். இவருக்கு ஒரு மகன், இரு மகள்கள்உள்ளனர்.

உயிர் போகும் முன்பும் கூட, தனது ஜனநாயக கடமையை நிறைவேற்றியது, பாராட்டத்தக்கதாக அமைந்து உள்ளது.






      Dinamalar
      Follow us