sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 26, 2025 ,மார்கழி 11, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வெளியூரில் வாக்காளர்கள் அழைத்து வர கட்சியினர் தீவிரம்

/

வெளியூரில் வாக்காளர்கள் அழைத்து வர கட்சியினர் தீவிரம்

வெளியூரில் வாக்காளர்கள் அழைத்து வர கட்சியினர் தீவிரம்

வெளியூரில் வாக்காளர்கள் அழைத்து வர கட்சியினர் தீவிரம்


ADDED : ஏப் 24, 2024 08:24 AM

Google News

ADDED : ஏப் 24, 2024 08:24 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மைசூரு : மைசூரு லோக்சபா தொகுதி, கர்நாடகாவில் அரசியல் பரபரப்பு மிகுந்த தொகுதிகளில் ஒன்று. மைசூரின் கிராமப்புறங்களை சேர்ந்த வாக்காளர்கள் பலரும், கல்வி, வேலை, தொழில் என, பல்வேறு காரணங்களால் நகர்ப்பகுதிகளுக்கு சென்றுஉள்ளனர்.

ஓட்டுப்பதிவு நடக்கும் நாளன்று, இவர்களை அவரவர் சொந்த ஊருக்கு வரவழைக்க, அரசியல் கட்சிகளின் வேட்பாளர்கள், அரசியல் தலைவர்கள் முயற்சிக்கின்றனர்.

வேறு ஊருக்குச் சென்றவர்களை அவர்களின் குடும்பத்தினர் மூலமாக, ஓட்டு போட அழைத்து வர தயாராகின்றனர்.

வாக்காளர் பட்டியலை வைத்துக்கொண்டு, அந்தந்த கிராமங்களுக்கு தகவல் சேகரிக்கின்றனர். வெளியூர் சென்றவர்கள் பற்றிய தகவலை தெரிந்து கொண்டு, தொலைபேசியில் தொடர்பு கொள்கின்றனர்.

'ஓட்டுப் பதிவு நாளன்று ஊருக்கு வாருங்கள். வந்து செல்வதற்கான போக்குவரத்து செலவை, நாங்களே ஏற்கிறோம்' என, அவர்கள் கூறுகின்றனர்.

சில தொண்டர்கள், தாங்களே வாகன வசதி செய்து கொடுப்பதாக உறுதி அளிக்கின்றனர். முன்கூட்டியே செலவுக்கான பணத்தை கொடுக்கின்றனர். வெளியூர் சென்றுள்ள வாக்காளர்களுக்கு திடீர் மவுசு அதிகரித்துள்ளது.






      Dinamalar
      Follow us