sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

'டிவி' பார்த்து விழுந்து விழுந்து சிரித்தவர் மயங்கி சரிந்து விழுந்தார்

/

'டிவி' பார்த்து விழுந்து விழுந்து சிரித்தவர் மயங்கி சரிந்து விழுந்தார்

'டிவி' பார்த்து விழுந்து விழுந்து சிரித்தவர் மயங்கி சரிந்து விழுந்தார்

'டிவி' பார்த்து விழுந்து விழுந்து சிரித்தவர் மயங்கி சரிந்து விழுந்தார்

3


ADDED : ஜூன் 03, 2024 11:15 PM

Google News

ADDED : ஜூன் 03, 2024 11:15 PM

3


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹைதராபாத்: தெலுங்கானா மாநிலம், ஹைதராபாதை சேர்ந்த 56 வயதான நபர், வீட்டில் டீ அருந்தியபடி, 'டிவி' பார்த்துக் கொண்டிருந்தார். ஏதோ நகைச்சுவை காட்சியை பார்த்துக் கொண்டிருந்தவர், சிரிப்பை அடக்க முடியாமல், வாய்விட்டு சிரித்தார்.

ஒரு சில நிமிடங்களுக்கு தொடர்ந்து சிரித்தபடி இருந்தவரின் கைகளில் இருந்த டீ கோப்பை கீழே விழுந்தது. அடுத்த நொடியே அவரது உடல் ஒரு பக்கமாக சாய்ந்து நாற்காலியில் இருந்து கீழே விழுந்து மயக்கமானார்.

இதை பார்த்த அவரது மகள் பதற்றத்துடன் தந்தையை எழுப்பினார். அவரோ சுயநினைவின்றி மயங்கி கிடந்தார். உடனே ஆம்புலன்ஸ் அழைக்கப்பட்டு அருகில் இருந்து மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

அவசர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்படும் போதே அந்த நபர் கண் திறந்து பார்த்து, பேச துவங்கினார். அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவரது உடல்நிலையில் எந்த பிரச்னையும் இல்லை என்பதை கண்டறிந்தனர்.

ஆனால், அவர் திடீரென சுயநினைவு இழந்தது ஏன் என்பதை ஆராய, அந்த நபரை நரம்பியல் நிபுணர் டாக்டர் சுதிர் குமாரிடம் அனுப்பினர். அவரை பரிசோதித்த டாக்டர் சுதிர் குமார், அந்த நபர் அதீத சிரிப்பால் மயக்கம் அடைந்ததை கண்டறிந்தார்.

இது பற்றி டாக்டர் சுதிர் கூறியதாவது:

அந்த 56 வயது நபருக்கு எவ்வித மருத்துவ குறைபாடும் இல்லை. நல்ல ஆரோக்கியமாகவே உள்ளார். எதற்காகவும் அவர் மருந்து உட்கொள்பவராகவும் இல்லை. அதீதமான சிரிப்பால் ஏற்படும், 'சின்கோப்' எனப்படும் தற்காலிக நினைவு இழப்பு அவருக்கு ஏற்பட்டுஉள்ளது.

அவருக்கு மருந்துகள் அளிக்கவில்லை. இதய பரிசோதனை மட்டும் செய்து கொள்ளும்படி அறிவுறுத்தி உள்ளோம். மற்றபடி அதீதமான சிரிப்பு, நீண்ட நேரம் நிற்பது, கடினமான உடல் உழைப்பு போன்றவற்றை தவிர்க்கும்படி கூறினேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

சிரிப்பால் மயக்கம் ஏன்?

அடக்க முடியாமல் அதீதமாக சிரிப்பதால் ஏற்படும் தற்காலிக நினைவு இழப்பை, 'லாப்டர் இண்ட்யூஸ்டு சின்கோப்' என்று அழைக்கின்றனர். இது ஒரு அரிதான குறைபாடு. ஒருவர் அதீதமாக சிரிக்கும்போது ரத்த அழுத்தம் மிக வேகமாக குறையும். அப்போது மூளைக்கு செல்லும் ரத்த ஓட்டம் திடீரென குறைவதால் நினைவு தவறுகிறது. ரத்த ஓட்டம் சீரானதும் மீண்டும் நினைவு திரும்புகிறது.








      Dinamalar
      Follow us