sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தப்ப முயன்ற ரவுடி சுட்டு பிடிப்பு 

/

தப்ப முயன்ற ரவுடி சுட்டு பிடிப்பு 

தப்ப முயன்ற ரவுடி சுட்டு பிடிப்பு 

தப்ப முயன்ற ரவுடி சுட்டு பிடிப்பு 


ADDED : மே 30, 2024 10:00 PM

Google News

ADDED : மே 30, 2024 10:00 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பீதர், --மருத்துவமனைக்கு அழைத்து சென்ற போது, இன்ஸ்பெக்டரை கத்தியால் தாக்கிவிட்டு தப்ப முயன்ற ரவுடி, துப்பாக்கியால் சுட்டு பிடிக்கப்பட்டார்.

திருட்டு வழக்கில் ரசூல், 35 என்ற ரவுடியை, கடந்த சில தினங்களுக்கு முன்பு பீதர் நியூ டவுன் போலீசார், கைது செய்தனர். நேற்று முன்தினம் இரவு, அவருக்கு உடல்நலக் குறைவு ஏற்பட்டது. நேற்று அதிகாலை 3:30 மணிக்கு அவரை ஜீப்பில் மருத்துவமனைக்கு அழைத்து சென்றனர்.

நகரில் உள்ள சாய் பள்ளி மைதானம் அருகே ஜீப் சென்றது. அப்போது போலீசாரை தள்ளிவிட்டு ஜீப்பில் இருந்து ரசூல் குதித்தார். பின்னர் அங்கிருந்து தப்ப முயன்றார்.

அதிர்ச்சி அடைந்த இன்ஸ்பெக்டர் சந்தோஷ், துப்பாக்கியால் வானத்தை நோக்கி ஒரு ரவுண்டு சுட்டு, சரண் அடையும்படி எச்சரித்தார்.

ஆனால் ரசூல், இன்ஸ்பெக்டரின் இடது கையில், கத்தியால் தாக்கி விட்டு ஓட முயன்றார். இதனால் அவரை நோக்கி, இன்ஸ்பெக்டர், துப்பாக்கியால் சுட்டார்.

ரசூலின் வலது காலில் குண்டு துளைத்தது. சுருண்டு விழுந்தவரை போலீசார் மீட்டு, பீதர் அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். ரசூலுக்கு எச்.ஐ.வி., பாதிப்பு இருப்பதால், மேல் சிகிச்சைக்காக கலபுரகியில் உள்ள, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.

கத்தியால் தாக்கியதில் காயம் அடைந்த இன்ஸ்பெக்டர், கலபுரகி மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார்.






      Dinamalar
      Follow us