sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கடைக்குள் புகுந்து உரிமையாளர் சுட்டுக் கொலை

/

கடைக்குள் புகுந்து உரிமையாளர் சுட்டுக் கொலை

கடைக்குள் புகுந்து உரிமையாளர் சுட்டுக் கொலை

கடைக்குள் புகுந்து உரிமையாளர் சுட்டுக் கொலை


ADDED : மே 30, 2024 02:04 AM

Google News

ADDED : மே 30, 2024 02:04 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:டில்லியில் கடைக்குள் புகுந்த இருவர் அதன் உரிமையாளரை சுட்டுக் கொன்று விட்டு தப்பினர்.

வடகிழக்கு டில்லி ஹர்ஷ் விஹாரை சேர்ந்தவர் சூரஜ்,32. கபீர் நகரில் அஹ்லாவத் பில்டிங் அருகே, குழாய் பொருத்துதல் மற்றும் பாலிஷ் செய்யும் சிறிய கடை நடத்தி வந்தார்.

நேற்று காலை 8:40 மணிக்கு இவரது கடைக்கு வந்த இருவர், துப்பாக்கியால் சூரஜை சரமாரியாக சுட்டனர். அவர் சரிந்து விழுந்ததும் இருவரும் தாங்கள் வந்த ஸ்கூட்டரில் தப்பினர்.

தகவல் அறிந்து சென்ற போலீசார், சூரஜ் உடலை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பினர்.மேலும், இதுகுறித்து வழக்குப் பதிவு செய்து கொலையாளிகள் குறித்து விசாரித்து வருகின்றனர். அந்தப் பகுதியில் உள்ள அனைத்து கண்காணிப்புக் கேமராக்களிலும் பதிவாகியுள்ள காட்சிகளையும் போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர்.






      Dinamalar
      Follow us