sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பருவ மழையால் பசுமையாகி கண்களுக்கு விருந்தளிக்கும் தேயிலை தோட்டங்கள்

/

பருவ மழையால் பசுமையாகி கண்களுக்கு விருந்தளிக்கும் தேயிலை தோட்டங்கள்

பருவ மழையால் பசுமையாகி கண்களுக்கு விருந்தளிக்கும் தேயிலை தோட்டங்கள்

பருவ மழையால் பசுமையாகி கண்களுக்கு விருந்தளிக்கும் தேயிலை தோட்டங்கள்


ADDED : ஆக 13, 2024 12:33 AM

Google News

ADDED : ஆக 13, 2024 12:33 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு : பருவ மழையின் இடையே தோன்றும் வெயிலில் தேயிலை தோட்டங்கள் ' பளீச்' என பசுமையாக கண்களுக்கு விருந்தளிக்கின்றது.

கேரளாவில் தென் மேற்கு பருவ மழை பெய்து வரும் நிலையில் இடுக்கி உள்பட எட்டு மாவட்டங்களுக்கு நேற்று வானிலை ஆய்வு மையம் பலத்த மழைக்கான 'எல்லோ அலர்ட்' முன்னெச்சரிக்கை விடுத்தது.இடுக்கி மாவட்டத்திற்கு நேற்று முன்தினம் பலத்த மழைக்கான 'எல்லோ அலர்ட்' விடுக்கப்பட்டபோதும் அதற்கு ஏற்ப மழை பெய்யவில்லை.

சுற்றுலா பகுதியான மூணாறில் பகல் 1:00 மணி வரை கோடை போன்று வெயில் சுட்டெரித்தது.

அதன்பிறகு அதற்கு மாறாக மாலை வரை மழை கொட்டித் தீர்த்தது.

மாவட்டத்திற்கு நேற்றும் ' எல்லோ அலர்ட்' விடுக்கப்பட்ட நிலையில், நேற்று முன்தினம் போன்று காலநிலை நிலவியது.

மூணாறில் நேற்று பகல் 3:00 வரை வெயில் காணப்பட்டது. அதன் பிறகு சிறிது நேரம் மழை பெய்தது.

பசுமை: பருவ மழையால் மலை, புல்மேடுகள், காடுகள், வனங்கள் என அனைத்தும் பசுமையாக காணப்படுகின்றன.

அவை மழை குறைந்து வெயில் தோன்றும் போது பசுமையுடன் ரம்மியமாக காணப்படுகின்றன. குறிப்பாக தேயிலை தோட்டங்கள் ' பளிச்' என பசுமையாக கண்களுக்கு விருந்தளிக்கின்றது.






      Dinamalar
      Follow us