ADDED : ஆக 18, 2024 06:53 PM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி தலைமை தன்னை அவமதித்து விட்டதாக முன்னாள் முதல்வர் சம்பாய் சோரன் குற்றச்சாட்டியுள்ளார். அரசியலில் இருந்து ஓய்வு பெறுவது, தனிக்கட்சி தொடங்குவது அல்லது வசதியான வேறு ஒரு துணையுடன் இணைந்து பயணிப்பது என அனைத்து சாய்ஸ்களும் இருப்பதாக சமூக வலைதளத்தில் பதிவு செய்துள்ளார்.
அவர் தெரிவித்துள்ளதாவது: நான் உள்ளிருந்து உடைந்தேன். என்ன செய்வதென்று புரியவில்லை. இரண்டு நாட்கள், நான் அமைதியாக உட்கார்ந்து சுயபரிசோதனை செய்து, முழு சம்பவத்திலும் என் தவறைத் தேடிக்கொண்டிருந்தேன். எனக்கு அதிகார பேராசை கொஞ்சம் கூட இல்லை, ஆனால் என் சுயமரியாதையை யாரிடம் காட்டுவது? எனது சொந்த மக்கள் படும் வேதனையை நான் எங்கே வெளிப்படுத்த முடியும்? இவ்வாறு சம்பாய் சோரன் பதிவிட்டுள்ளார்.

