ADDED : ஜூலை 24, 2024 11:25 PM

பெங்களூரு, : ''கூட்டுறவு வங்கிகளில், விவசாயிகள் பெற்றுள்ள பயிர்க்கடனை ரத்து செய்யும் ஆலோசனை, அரசிடம் இல்லை,'' என, கூட்டுறவுத்துறை அமைச்சர் ராஜண்ணா மேலவையில் தெரிவித்தார்.
கர்நாடக மேலவை கேள்வி நேரத்தில், பா.ஜ., உறுப்பினர் ரவியின் கேள்விக்கு பதிலளித்து, அமைச்சர் ராஜண்ணா கூறியதாவது:
விவசாயிகள் டெபாசிட் வைத்துள்ள பணத்தால் தான், கூட்டுறவு வங்கிகள் செயல்படுகின்றன. இச்சூழ்நிலையில், கூட்டுறவு வங்கிகளில் விவசாயிகள் பெற்ற பயிர்க்கடனை ரத்து செய்ய முடியாது. கடனை ரத்து செய்வதாக, பட்ஜெட்டிலும் அறிவிக்கவில்லை.
இது பற்றி அரசு ஆலோசிக்கவில்லை. 2024 - 25ல், 35.10 லட்சம் விவசாயிகளுக்கு, 25,000 கோடி ரூபாய் குறுகிய கால கடன் வழங்கப்பட்டது.
நடுத்தர மற்றும் நீண்ட கால கடன் திட்டத்தின் கீழ், 90,000 கோடி ரூபாய் கடன் வழங்க, இலக்குநிர்ணயித்துள்ளோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

