sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கடற்படை தள புகைப்படம் கசிந்த வழக்கில் மூவர் கைது 

/

கடற்படை தள புகைப்படம் கசிந்த வழக்கில் மூவர் கைது 

கடற்படை தள புகைப்படம் கசிந்த வழக்கில் மூவர் கைது 

கடற்படை தள புகைப்படம் கசிந்த வழக்கில் மூவர் கைது 


ADDED : ஆக 29, 2024 02:38 AM

Google News

ADDED : ஆக 29, 2024 02:38 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கார்வார்: கார்வாரில் கடம்பா கடற்படை தளம் உள்ளது. இந்த தளத்தின் புகைப்படம், தளத்தை பற்றிய விவரத்தை வெளிநாட்டு உளவு துறைக்கு அனுப்பிய வழக்கில், கார்வாரை சேர்ந்த தீபக் என்பவரை, கடந்த ஆண்டு ஹைதராபாதில் வைத்து என்.ஐ.ஏ., கைது செய்தது.

இந்நிலையில் தீபக்கிடம் நடத்திய விசாரணையில், கடற்படை தளத்தில் ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்த, கார்வார் அருகே தோதுார் கிராமத்தின் சுனில் நாயக், ஈபவ் தண்டேல், அக் ஷய் ரவி நாயக் ஆகியோர், புகைப்படத்தை எடுத்து தனக்கு அனுப்பியதாக கூறினார்.

அவர்கள் மூன்று பேரை பற்றியும், என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரித்தனர். அக் ஷய் ரவி நாயக், கடற்படை வேலையை விட்டுவிட்டு, கோவாவில் உள்ள கேன்டீனில் வேலை செய்தது தெரிந்தது. அவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டார். சுனில் நாயக், ஈபவ் தண்டேல் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டனர். மூன்று பேரிடமும் ரகசிய இடத்தில் வைத்து, என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரிக்கின்றனர்.






      Dinamalar
      Follow us