இன்று பார்லி., கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி முர்மு உரை
இன்று பார்லி., கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி முர்மு உரை
UPDATED : ஜூன் 27, 2024 11:45 AM
ADDED : ஜூன் 27, 2024 01:28 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: பாராளுமன்ற லோக்சபா சபாநாயகராக மீண்டும் ஓம் பிர்லா தேர்வு பெற்ற நிலையில் இன்று இரு சபைகளின் கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி திரவுபதி முர்மு உரையாற்றுகிறார்.
நடந்து முடிந்த லோக்சபா தேர்தலில் பா.ஜ., கூட்டணி ஆட்சி அமைத்துள்ளது. மூன்றாம் முறையாக பிரதமர் மோடி பதவியேற்றார். அவருடன் மத்திய அமைச்சர்கள் பதவியேற்றனர்
இந்நி்லையில் நேற்று லோக்சபா சபாநாயகராக ஓம் பிர்லா மீண்டும் தேர்வு பெற்றார். பிரதமர் மோடியும், எதிர்க்கட்சி தலைவர் ராகுலும் அவரை அழைத்து சென்று சபாநாயகர் இருக்கையில் அமர வைத்து வாழ்த்து தெரிவித்தனர்.
இதையடுத்து இன்று லோக்சபா, ராஜ்யசபா கூட்டு கூட்டத்தில் ஜனாதிபதி உரையாற்றுகிறார்.