sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

தெலுங்கானாவில் டிராபிக் பணியில் திருநங்கையர்

/

தெலுங்கானாவில் டிராபிக் பணியில் திருநங்கையர்

தெலுங்கானாவில் டிராபிக் பணியில் திருநங்கையர்

தெலுங்கானாவில் டிராபிக் பணியில் திருநங்கையர்


ADDED : செப் 14, 2024 11:55 PM

Google News

ADDED : செப் 14, 2024 11:55 PM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹைதராபாத்: ஹைதராபாத் நகரில் போக்குவரத்தை சீர்படுத்தும் பணியில் திருநங்கையரை நியமிக்க உள்ளதாக தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி நேற்று அறிவித்தார்.

தெலுங்கானாவில் முதல்வர் ரேவந்த் ரெட்டி தலைமையில் காங்கிரஸ் ஆட்சி நடக்கிறது. சமீபத்தில் ஹைதராபாத் நகரின் போக்குவரத்து நிலைமை குறித்து ரேவந்த் ரெட்டி ஆய்வு செய்தார்.

அப்போது ஊர்க்காவல் படையில் திருநங்கையரை சேர்த்து, அவர்களுக்கு ஹைதராபாதின் நெரிசல் மிகுந்த சாலைகளில் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணி வழங்கலாம் என, போலீஸ் அதிகாரிகளிடம் கூறினார்.

முதல்வரின் ஆலோசனைப்படி, ஹைதராபாத் போக்குவரத்து போலீசாருக்கு உதவியாக திருநங்கையரை பணியமர்த்த காவல் துறை திட்டமிட்டுள்ளது.

இதற்காக ஆர்வமுள்ள திருநங்கையரை அடையாளம் கண்டு, பயிற்சி அளிக்கும் பணி விரைவில் துவங்கும் என போலீசார் தெரிவித்தனர்.






      Dinamalar
      Follow us