sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

'டிவி' சேனல் கேமராமேன் யானை மிதித்து உயிரிழப்பு

/

'டிவி' சேனல் கேமராமேன் யானை மிதித்து உயிரிழப்பு

'டிவி' சேனல் கேமராமேன் யானை மிதித்து உயிரிழப்பு

'டிவி' சேனல் கேமராமேன் யானை மிதித்து உயிரிழப்பு


ADDED : மே 09, 2024 02:34 AM

Google News

ADDED : மே 09, 2024 02:34 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு:கேரள மாநிலம், மலப்புரம் மாவட்டம், பரப்பனங்காடி செட்டிப்படியைச் சேர்ந்த உண்ணி - தேவி தம்பதியின் மகன் முகேஷ், 34; பாலக்காட்டில் 'மாத்ருபூமி' செய்திச் சேனலில் வீடியோகிராபராக பணியாற்றினார்.

மலம்புழா பனமரக்காடு என்ற இடத்தில் குடியிருப்பு பகுதிக்குள் காட்டு யானை கூட்டம் முகாமிட்டுள்ளதாக கிடைத்த தகவலால், அங்கு செய்தி சேகரிக்க நேற்று காலை 7:00 மணிக்கு வீடியோகிராபர் முகேஷ், நிருபர் கோகுல் மற்றும் கார் டிரைவர் மனோஜ் ஆகியோர் சென்றனர்.

அங்கு, ஆற்றை கடந்து சென்ற யானைக் கூட்டத்தை, முகேஷ் வீடியோ எடுத்துள்ளார். அப்போது, திடீரென முகேஷ் உள்ளிட்டோரை காட்டு யானைகள் துரத்தியதால் மூவரும் தப்பி ஓட முயன்றனர்.

கால் தவறி விழுந்த முகேஷை யானை மிதித்தது. அங்கிருந்தோர் முகேஷை மீட்டு, பாலக்காடு மாவட்ட அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால், சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இச்சம்பவம் தொடர்பாக, புதுச்சேரி - கசபா போலீசார் விசாரிக்கின்றனர். முகேஷ் மறைவுக்கு, கேரள முதல்வர் பினராயி விஜயன் இரங்கல் தெரிவித்தார்.






      Dinamalar
      Follow us