sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, டிசம்பர் 12, 2025 ,கார்த்திகை 26, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

யானை தந்தங்களை விற்க முயன்ற இருவர் கைது

/

யானை தந்தங்களை விற்க முயன்ற இருவர் கைது

யானை தந்தங்களை விற்க முயன்ற இருவர் கைது

யானை தந்தங்களை விற்க முயன்ற இருவர் கைது


ADDED : ஆக 25, 2024 02:26 AM

Google News

ADDED : ஆக 25, 2024 02:26 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு:கேரள மாநிலம் மூணாறு அருகே ஆனச்சாலில் யானை தந்தங்களை விற்க முயன்ற இருவரை வனத்துறையினர் கைது செய்தனர்.

மூணாறு அருகே ஆனச்சால் பகுதியை மையப்படுத்தி சிலர் யானை தந்தங்களை விற்க முயல்வதாக பள்ளிவாசல் வனத்துறையினருக்கு தகவல் கிடைத்தது. வனத்துறை அதிகாரி அனில்குமார், சம்பந்தப்பட்டவர்களை அலைபேசியில் தொடர்பு கொண்டு தந்தங்களை வாங்குவதாக நாடகமாடி விலை பேசினார்.

அவரிடம் ரூ.40 ஆயிரம் என விலை கூறினர். தந்தங்களை விற்க முன் வந்தவர்களை வனத்துறையினர் ஆனச்சால் வரவழைத்து சுற்றி வளைத்து பிடித்தனர். அவர்களிடம் விசாரித்த போது மூணாறு அருகே போதமேடு பகுதியைச் சேர்ந்த டிஞ்சுகுட்டன் 29, மணி 36, எனவும், தந்தங்களை டிஞ்சுகுட்டன் என்பவரது வீட்டில் மறைத்து வைத்திருப்பதாகவும் தெரிவித்தனர்.

அவரது வீட்டில் இருந்து தந்தத்தின் மூன்று துண்டுகளை பறிமுதல் செய்த நிலையில் தேவிகுளம் வனத்துறை அதிகாரி வெஜி தலைமையில் வனக்காவலர்கள் இருவரையும் கைது செய்தனர்.

டிஞ்சுகுட்டன் வீட்டில் சிக்கிய தந்தங்கள் அவரது தாயாரிடம் ஒருவர் கொடுத்ததாக தெரியவந்தது. மேல்விசாரணை நடக்கிறது.






      Dinamalar
      Follow us