sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஐஸ்கிரீமில் மது கலந்து விற்பனை தெலுங்கானாவில் இருவர் சிக்கினர்

/

ஐஸ்கிரீமில் மது கலந்து விற்பனை தெலுங்கானாவில் இருவர் சிக்கினர்

ஐஸ்கிரீமில் மது கலந்து விற்பனை தெலுங்கானாவில் இருவர் சிக்கினர்

ஐஸ்கிரீமில் மது கலந்து விற்பனை தெலுங்கானாவில் இருவர் சிக்கினர்

1


ADDED : செப் 08, 2024 02:21 AM

Google News

ADDED : செப் 08, 2024 02:21 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹைதராபாத் : தெலுங்கானாவில் மது கலந்த ஐஸ்கிரீம் விற்பனை செய்த இருவரை போலீசார் கைது செய்தனர்.

தெலுங்கானா மாநிலம், ஹைதராபாதின் ஹூப்ளி ஹில் பகுதியில் அரிகோ கபே என்ற உணவு விடுதி செயல்படுகிறது.

இங்கு வெளிநாட்டவர் மற்றும் உள்ளூர்வாசிகள் அதிகம் பேர் வருகை புரிகின்றனர். இந்த கபே, ஜெலடோ வகை ஐஸ்கிரீம் விற்பனைக்கு பெயர் பெற்றது. பலரும் இந்த வகை ஐஸ்கிரீமை விரும்பி வாங்கி சாப்பிடுவர்.

இந்நிலையில், அரிகோ கபேயில் விற்கப்படும் ஜெலடோ ஐஸ்கிரீமில் மது கலக்கப்படுவதாக புகார் எழுந்தது.

இதையடுத்து தெலுங்கானா மதுவிலக்கு போலீசார் இந்த கபேயில் சமீபத்தில் அதிரடி சோதனை நடத்தினர். அதில், ஐஸ்கிரீமில் மது கலந்திருப்பது உறுதி செய்யப்பட்டது.

ஒரு கிலோ ஐஸ்கிரீமில், 60 மி.லி., அளவுக்கு விஸ்கி எனும் மது வகையை கலப்பதாக ஊழியர்கள் ஒப்புக் கொண்டனர்.

இதையடுத்து மது கலந்த 11.5 கிலோ ஐஸ்கிரீமை போலீசார் பறிமுதல் செய்தனர். இது தொடர்பாக இருவர் கைது செய்யப்பட்டனர். கபே மீதும் வழக்கு பதியப்பட்டுள்ளது.






      Dinamalar
      Follow us