sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

600 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து இருவர் பலி

/

600 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து இருவர் பலி

600 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து இருவர் பலி

600 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து இருவர் பலி


ADDED : மே 09, 2024 11:36 PM

Google News

ADDED : மே 09, 2024 11:36 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

மூணாறு : கொட்டாரக்கரை - திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் குட்டிகானம் புலிபாறை அருகே 600 அடி பள்ளத்தில் கார் கவிழ்ந்து சுற்றுலா பயணிகள் இருவர் பலியாயினர். நான்கு பேர் பலத்த காயமடைந்தனர்.

கேரளா திருவனந்தபுரம் நாவாய்குளம் பகுதியைச் சேர்ந்த ஷிபு 51, அவரது மனைவி மஞ்சு 43, மகன் ஆதிதேவ் 21, மகள்கள் பத்ரா 18, பாக்யா 12, மஞ்சுவின் சகோதரி சிந்து 45, ஆகியோர் இடுக்கி மாவட்டம் வாகமண்ணுக்கு காரில் சுற்றுலா வந்தனர். ஷிபு காரை ஓட்டினார்.

சுற்றுலாவை முடித்து திரும்புகையில் கொட்டாரக்கரை- திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் குட்டிகானம் புலிபாறை பகுதியில் நேற்று மதியம் 3:45 மணிக்கு சென்றபோது கார் கட்டுப்பாட்டை இழந்து தடுப்புகளை உடைத்துக் கொண்டு 600 அடி பள்ளத்தில் கவிழ்ந்தது.

விபத்து ஏற்பட்ட பகுதி பாறை என்பதால் கார் உருக்குலைந்து நொறுங்கியது. விபத்தில் சிந்து, பத்ரா பலியாயினர். மற்ற நான்கு பேரும் பலத்த காயமடைந்தனர். சம்பவத்தின் போது கோடை மழையால் மீட்பு பணிகள் பாதிக்கப்பட்டன. ஷிபு, மஞ்சு கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பெறு கின்றனர்.






      Dinamalar
      Follow us