sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மனைவியை காப்பாற்ற முயன்ற கணவர் உட்பட இருவர் பலி

/

மனைவியை காப்பாற்ற முயன்ற கணவர் உட்பட இருவர் பலி

மனைவியை காப்பாற்ற முயன்ற கணவர் உட்பட இருவர் பலி

மனைவியை காப்பாற்ற முயன்ற கணவர் உட்பட இருவர் பலி


ADDED : ஆக 01, 2024 12:09 AM

Google News

ADDED : ஆக 01, 2024 12:09 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கலபுரகி: கலபுரகி, அப்ஜல்புராவின், கடனி கிராமத்தை சேர்ந்தவர் சிவகுமார், 45. இவரது மனைவி லட்சுமி, 38. குடும்ப பிரச்னை காரணமாக, தம்பதிக்கு அவ்வப்போது தகராறு நடப்பது வழக்கம்.

நேற்று முன்தினம் மாலையும், தம்பதிக்கு சண்டை நடந்தது. மனம் வருந்திய லட்சுமி, தேவனகாவ் பாலத்தில் இருந்து, பீமா ஆற்றில் குதித்து தற்கொலைக்கு முயற்சித்தார். மனைவியை காப்பாற்ற சிவகுமாரும், அவரது உறவினர் ராஜு, 40 என்பவரும் ஆற்றில் குதித்தனர்.

லட்சுமி, மீனவர்கள் வீசிய மீன் வலையில்சிக்கியதால், அவரை மீனவர்கள் காப்பாற்றி கரை சேர்த்தனர்.

ஆனால் சிவகுமாரும், ராஜுவும் வெள்ளத்தில் அடித்து செல்லப்பட்டனர்.

தகவலறிந்த போலீசார், தீயணைப்பு படையினர், சிவகுமார், ராஜுவின் உடல்களை நேற்று காலை மீட்டனர்.






      Dinamalar
      Follow us