ADDED : ஜூலை 05, 2024 01:33 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
ராஜ்நிவாஸ் மார்க்:கொடிக்கம்ப சாலையில் உள்ள முதல்வரின் அதிகாரப்பூர்வ பழைய இல்லத்தை இடித்துவிட்டு, அதே இடத்தில் 50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் புதிய இல்லம் கட்டும் பணி நடந்து வருகிறது. இந்த பணிகளில் முறைகேடு நடந்ததாக புகார் எழுந்தது.
இதைத் தொடர்ந்து முறைகேட்டில் ஈடுபட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க துணைநிலை கவர்னர் வி.கே.சக்சேனாவின் ஒப்புதல் அளித்தார்.
அதன் பிறகு இரண்டு பொறியாளர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர். மேலும் ஐந்து பேர் மீது நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டுள்ளதாக மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்தனர்.