sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

நிலச்சரிவு குறித்து கேரளாவுக்கு பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டது மத்திய அமைச்சர் அமித் ஷா

/

நிலச்சரிவு குறித்து கேரளாவுக்கு பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டது மத்திய அமைச்சர் அமித் ஷா

நிலச்சரிவு குறித்து கேரளாவுக்கு பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டது மத்திய அமைச்சர் அமித் ஷா

நிலச்சரிவு குறித்து கேரளாவுக்கு பலமுறை எச்சரிக்கை விடுக்கப்பட்டது மத்திய அமைச்சர் அமித் ஷா

6


ADDED : ஆக 01, 2024 01:32 AM

Google News

ADDED : ஆக 01, 2024 01:32 AM

6


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி, ''கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக ஏழு நாட்களுக்கு முன்னரே கேரள அரசுக்கு எச்சரிக்கை விடுக்கப்பட்டது,'' என, மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.

ராஜ்யசபாவில், குறுகியகால கவன ஈர்ப்பு தீர்மானத்தின் போது, கேரளநிலச்சரிவு குறித்து விவாதிக்கப்பட்டது.

அப்போது பேசிய மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா பேசியதாவது:

வயநாட்டில் நிலச்சரிவு ஏற்பட வாய்ப்புள்ளதாக ஒரு வாரத்திற்கு முன்னரே கேரள அரசுக்கு மத்திய அரசு எச்சரிக்கை விடுத்தது. கடந்த ஜூலை 23ம் தேதியன்று அது தொடர்பான முதல் எச்சரிக்கை விடப்பட்டது.

அன்றைய தினமே, தேசிய பேரிடர் மீட்புப் படையின் ஒன்பது குழுக்கள், விமானம் வாயிலாக கேரளாவுக்கு அனுப்பி வைக்கப்பட்டன.

இதையடுத்து, ஜூலை 24, 25 மற்றும் 26ம் தேதிகளிலும் கனமழை மற்றும் நிலச்சரிவு குறித்து மீண்டும் தொடர் எச்சரிக்கைகள் விடுக்கப்பட்டன.

ஏழு நாட்களுக்கு முன்...


அங்கு, 20 செ.மீ.,க்கு அதிகமாக மழை காரணமாக நிலச்சரிவுகள் ஏற்படவும் வாய்ப்புள்ளது என எச்சரிக்கப்பட்டது. மேலும், மூன்று மீட்புக் குழுக்கள் அங்கு அனுப்பி வைக்கப்பட்டன.

எச்சரிக்கையை தீவிரமாக எடுத்துக் கொண்டிருந்தால், நிலைமை இவ்வளவு மோசமாகி இருக்காது. ஆனால், மத்திய அரசின் முன்னெச்சரிக்கை நெறிமுறை குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டன.

தயவுசெய்து நாங்கள் சொல்வதைக் கேளுங்கள்; கூச்சலிடாதீர்கள். வானிலை எச்சரிக்கை அறிக்கையை தயவுசெய்து படியுங்கள்.

இந்த எச்சரிக்கையை பொருட்படுத்தாமல் அலட்சியப்படுத்தியதால் தான் உயிரிழப்புகள் அதிகரித்துள்ளன. அம்மாநில அரசு அங்கிருந்த மக்களை வெளியேற்றவில்லை. கேரள அரசு விழிப்புடன் இருந்திருந்தால் உயிரிழப்புகளை குறைத்திருக்கலாம்.

இயற்கைப் பேரழிவுகள் குறித்து, குறைந்தது ஏழு நாட்களுக்கு முன்னரே எச்சரிக்கை செய்யக்கூடிய நான்கு நாடுகளில் இந்தியாவும் ஒன்று. அந்த வகையில் விடுக்கப்பட்ட எச்சரிக்கையை பொருட்படுத்தாததே உயிரிழப்புகள் அதிகரிக்க காரணம்.

மீட்புப் படைகள் அனுப்பி வைக்கப்பட்ட பின், கேரள அரசு என்ன செய்தது என நான் கேட்கலாமா? பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் அங்கீகரிக்கப்படாத மக்கள் வசிக்கின்றனரா, இல்லையா?

அங்கிருந்த மக்கள் வெளியேற்றப்பட்டனரா? இல்லையா? அவர்கள் ஏன் வெளியேற்றப்படவில்லை? யாராவது இதை தடுத்து நிறுத்தினரா?

வெளியேற்றப்பட்டிருந்தால் மக்கள் எப்படி இறந்தனர்? இந்த துயரமான நேரத்தில் பிரதமர் நரேந்திர மோடியின் அரசு, கேரள மக்களுடனும், அம்மாநில அரசுடனும் ஒரு பாறை போல நிற்கிறது.

வலியுறுத்தல்


இந்த நேரத்தில், அவர்களுக்கு தேவையான எல்லா உதவியையும் மத்திய அரசு செய்யும் என உறுதியளிக்கிறேன்.

இவ்வாறு அவர் பேசினார்.

விவாதத்தின் போது, காங்கிரஸ், ஆம் ஆத்மி, தேசியவாத காங்கிரஸ்,அ.தி.மு.க., உள்ளிட்ட கட்சி எம்.பி.,க்கள், வயநாடு நிலச்சரிவை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தினர்.

அதேபோல், பா.ஜ., - எம்.பி.,க்கள், இந்த நேரத்தில் வயநாடு தொகுதியின் முன்னாள் எம்.பி., ராகுல் அங்கு செல்லாதது ஏன் என கேள்வி எழுப்பினர்.

'பினராயி விஜயன் மறுப்பு'

கேரள முதல்வர் பினராயி விஜயன் நேற்று செய்தியாளர்களிடம் கூறியதாவது:இந்திய வானிலை ஆய்வு மையம், வயநாடு மாவட்டத்துக்கு 20 செ.மீ., வரையிலான மிக கனமழைக்கான ஆரஞ்சு எச்சரிக்கையை மட்டுமே விடுத்தது. எனினும், வயநாட்டில் 50 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. இது, வானிலை ஆய்வு மையம் கணித்ததை விட மிக மிக அதிகம். நேற்று முன்தினம் காலை நிலச்சரிவு ஏற்பட்ட பின்னரே, வயநாடு மாவட்டத்துக்கு அதி கனமழைக்கான சிவப்பு எச்சரிக்கை விடுக்கப்பட்டது. குற்றஞ்சாட்டுவதற்கான நேரம் இதுவல்ல. அமித் ஷாவின் கருத்துகளை நான் விரோதமாக எடுத்துக் கொள்ளவில்லை.இவ்வாறு அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us