sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

அசாமில் வடியாத வெள்ளம்; ஆறு லட்சம் மக்கள் பாதிப்பு

/

அசாமில் வடியாத வெள்ளம்; ஆறு லட்சம் மக்கள் பாதிப்பு

அசாமில் வடியாத வெள்ளம்; ஆறு லட்சம் மக்கள் பாதிப்பு

அசாமில் வடியாத வெள்ளம்; ஆறு லட்சம் மக்கள் பாதிப்பு

1


ADDED : ஜூன் 03, 2024 03:48 AM

Google News

ADDED : ஜூன் 03, 2024 03:48 AM

1


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

குவஹாத்தி : அசாமில் 10 மாவட்டங்களில் வெள்ள நீர் வடியாததால், ஆறு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

வடகிழக்கு மாநிலமான அசாமில், 'ரேமல்' புயல் காரணமாக, கடந்த வாரத்தில் கனமழை பெய்தது. இதனால், மாநிலத்தில் பாயும் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அதனால், பல்வேறு மாவட்டங்களில் வெள்ளம் சூழ்ந்தது.

தேசிய பேரிடர் மீட்புப்படை, மாநில பேரிடர் மீட்புப்படை மற்றும் மாவட்ட நிர்வாகத்தினர் இணைந்து மீட்புப் பணிகளில் ஈடுபட்டு வருகின்றனர். 40,000 பேர் மீட்கப்பட்டு நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர். 15 பேர் மழை, வெள்ளத்துக்கு உயிரிழந்துஉள்ளனர்.

மாநிலத்தில் உள்ள கோபிலி, பராக், குஷியாரா ஆறுகளில் அபாய கட்டத்தை தாண்டி வெள்ளம் பாய்கிறது. நாகோன், ஹோஜாய், கச்சார் உட்பட 10 மாவட்டங்களில் இன்னும் வெள்ள நீர் வடியாமல் உள்ளது.

இந்த மாவட்டங்களில் ஆறு லட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் தவித்து வருகின்றனர். இதில், நாகோன் மாவட்டம் மிக மோசமாக பாதிக்கப்பட்டு உள்ளது. இங்கு மட்டும் மூன்று லட்சம் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.

மேலும், ரயில் மற்றும் சாலை வழித்தடங்களும் இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை. இதனால், நிவாரண பொருட்களை சேர்ப்பதில் சிரமம் நிலவுகிறது. அசாமில் இன்று வரை 10 ரயில்கள் ரத்து செய்யப்பட்டு இருப்பதாக, தென்கிழக்கு எல்லை ரயில்வே அறிவித்துஉள்ளது.






      Dinamalar
      Follow us