sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

உ.பி., இடைத்தேர்தல் : எத்தனை இடங்களில் சமாஜ்வாதி, காங்., போட்டி?

/

உ.பி., இடைத்தேர்தல் : எத்தனை இடங்களில் சமாஜ்வாதி, காங்., போட்டி?

உ.பி., இடைத்தேர்தல் : எத்தனை இடங்களில் சமாஜ்வாதி, காங்., போட்டி?

உ.பி., இடைத்தேர்தல் : எத்தனை இடங்களில் சமாஜ்வாதி, காங்., போட்டி?

4


ADDED : ஜூலை 19, 2024 08:28 PM

Google News

ADDED : ஜூலை 19, 2024 08:28 PM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

லக்னோ: உ.பி., மாநிலத்தில் காலியாக உள்ள 10 தொகுதிகளில் ஏழு இடங்களில் அகிலேஷ் கட்சியும். மூன்று இடங்களில் காங்.,கும் போட்டியிட முடிவு செய்துள்ளதாகவும். இது குறித்த பேச்சுவார்த்தை விரைவில் துவங்கும் என கூறப்படுகிறது.

உ.பி., மாநிலத்தில் எம்.எல்.ஏக்களாக இருந்தவர்களில் ஒன்பது பேர், நடந்து முடிந்த பொது தேர்தலில் எம்.பிக்களாக தேர்ந்தெடுக்கப்பட்டனர். இதன் காரணமாக எம்.எல்.ஏ., பதவியை ராஜினாமா செய்தனர். மேலும் சமஜ்வாதி கட்சியை சேர்ந்த எம்.எல்.ஏ ஒருவர் குற்றவியல் வழக்கில் நீதிமன்றம் விதித்த தண்டனை காரணமாக எம்.எல்.ஏ. பதவியை இழந்தார். இதன் காரணமாக மாநிலத்தில் தற்போது 10 இடங்கள் காலியாக உள்ளது.

மாநிலத்தில் மில்கிபூர், கர்ஹால், மிராபூர், குந்தர்கி, காசியாபாத், கெய்ர், புல்பூர், கதேஹாரி, மஜ்வான் மற்றும் ஷிஷாமாவ் ஆகிய 10 தொகுதிகள் காலியாக உள்ளன.

கடந்த 2022-ல் நடைபெற்ற சட்டசபை தேர்தலில் மிலிபூர், கர்ஹால், ஷிஷாமாவ், கதேஹரி மற்றும் குந்தர்கி ஆகிய இடங்களில் சமாஜ்வாதி வெற்றி பெற்றது. பாஜக மூன்று இடங்களிலும், அதன் கூட்டணிக் கட்சிகளான ராஷ்ட்ரிய லோக்தளம் (ஆர்எல்டி) மற்றும் நிஷாத் கட்சி (என்பி) தலா ஒரு இடத்திலும் வெற்றி பெற்றன.

இதில் ஏற்கனவே சமஜ்வாதி கட்சி வெற்றி பெற்ற தொகுதியில் மீண்டும் அக்கட்சியே போட்டியிடுவதுடன் கூடுதலாக இரண்டுதொகுதிகளிலும் போட்டியிட முடிவு செய்துள்ளது. மேலும் காஜியாபாத், கைர் மற்றும் புல்பூர் ஆகிய மூன்று தொகுதிகளில் காங்கிரஸ் போட்டியிட கூடும் என கூறப்படுகிறது.

அதே நேரத்தில் லோக்சபா தொகுதியில் பெற்ற தோல்வியை அடுத்து மாநில முதல்வர் யோகி ஆதித்யநாத் மொத்தமுள்ள 10 இடங்களில் எட்டு தொகுதிகளில் மூன்று அமைச்சர்களை பொறுப்பாளர்களாக நியமித்து உள்ளார். இவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளில் முகாமிட்டு உள்ளூர் தலைவர்கள் மற்றும் தொண்டர்களுடன் ஒருங்கிணைந்து வெற்றியை உறுதி செய்ய முனைப்பு காட்டி வருகின்றனர்.






      Dinamalar
      Follow us