ADDED : மார் 22, 2024 07:02 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
பங்கார்பேட்டை: லோக்சபா தேர்தலை ஒட்டி பொதுமக்களுக்கு பாதுகாப்பும், விழிப்புணர்வும் ஏற்படுத்தும் வகையில் பங்கார்பேட்டையில் போலீசார் அணிவகுப்பு நடத்தினர்.
லோக்சபா தேர்தலில் அமைதியான முறையில் ஓட்டுப் பதிவு நடக்க வேண்டும். பொதுமக்களுக்கு எந்த வகையிலும் அச்சுறுத்தல் இருக்க கூடாது.
சுதந்திரமாக ஓட்டளிக்க வேண்டும் என்பதற்காக பங்கார்பேட்டை போலீஸ் நிலையத்தில் இருந்து புறப்பட்ட போலீசார் பூதிக்கோட்டை சாலை, சி.ரஹீம் காம்பவுண்ட், காதர் லே - அவுட், கங்கம்மா பாளையா, திப்பு நகர், சேட் காம்பவுண்ட், அரசு மருத்துவமனை வழியாக போலீஸ் நிலையம் வந்தடைந்தனர்.

