sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மணிப்பூரில் மீண்டும் வன்முறை அமைச்சர் வீட்டின் மீது குண்டு வீச்சு

/

மணிப்பூரில் மீண்டும் வன்முறை அமைச்சர் வீட்டின் மீது குண்டு வீச்சு

மணிப்பூரில் மீண்டும் வன்முறை அமைச்சர் வீட்டின் மீது குண்டு வீச்சு

மணிப்பூரில் மீண்டும் வன்முறை அமைச்சர் வீட்டின் மீது குண்டு வீச்சு


ADDED : செப் 17, 2024 01:00 AM

Google News

ADDED : செப் 17, 2024 01:00 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

இம்பால், மணிப்பூரில் அமைச்சர் காஷிம் வஷும் வீட்டை குறிவைத்து, கையெறி குண்டுகளை வீசி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

வட கிழக்கு மாநிலமான மணிப்பூரில், முதல்வர் பைரேன் சிங் தலைமையில், பா.ஜ., ஆட்சி நடக்கிறது.

இங்கு, 2023 மே மாதம் நடந்த கலவரத்துக்கு பின், படிப்படியாக இயல்புநிலை திரும்பி வந்த நிலையில், தற்போது மீண்டும் ஆங்காங்கே வன்முறை சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

தாக்குதல்

கடந்த முறை போலல்லாமல் இந்த முறை, 'ட்ரோன்' எனப்படும் ஆளில்லா சிறிய விமானங்கள், வெடி மருந்துகள் நிரப்பிய ராக்கெட்டுகள் உள்ளிட்டவற்றை ஆயுதமேந்திய குழுக்கள் பயன்படுத்தி வருவது, பாதுகாப்புப் படையினருக்கு சவாலாக உள்ளது.

இந்நிலையில், மணிப்பூரின் உக்ருல் மாவட்டத்தில் உள்ள ஆளும் பா.ஜ., அரசில் அங்கம் வகிக்கும் நாகா மக்கள் முன்னணியைச் சேர்ந்த மாநில அமைச்சர் காஷிம் வஷுமின் வீட்டை குறிவைத்து, கையெறி குண்டுகளை வீசி பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர்.

இச்சம்பவத்தின் போது, அமைச்சர் காஷிம் மற்றும் அவரது குடும்பத்தினர் வீட்டில் இல்லை. இந்த தாக்குதலில், அவரது வீட்டின் சுற்றுச்சுவர் மற்றும் சில பகுதிகள் சேதமடைந்தன.

கண்டனம்

இது குறித்து போலீசார் கூறுகையில், 'கண்காணிப்பு கேமரா காட்சிகளை ஆய்வு செய்து குற்றவாளிகளை தேடி வருகிறோம். இந்த தாக்குதலை பயங்கரவாதிகள் நடத்தியிருக்கலாம் என சந்தேகிக்கிறோம்' என்றனர்.

இந்த தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த டாங்குல் நாகா பழங்குடியினரின் உச்ச அமைப்பான டாங்குல் நாகா லாங், குற்றவாளிகளை கைது செய்யும்படி போலீசாருக்கு வலியுறுத்தி உள்ளது.

இதற்கிடையே, மணிப்பூரில் நாசவேலைகளில் ஈடுபட்டதாகக் கூறி, அம்மாநிலத்தின் சுராசந்த்பூர் மாவட்டத்தைச் சேர்ந்த 34 வயதான நபரை, அசாமின் குவஹாத்தியில் அம்மாநில போலீசார் நேற்று கைது செய்தனர்.

'வெளிநாட்டு சக்திகள் காரணம்'

மணிப்பூரின் சந்தேல் மாவட்டத்தில், நம் அண்டை நாடான மியான்மரின் கம்பட் என்ற பகுதியைச் சேர்ந்த தங்கலிங்கப் என்பவரை, மாநில போலீசார் சமீபத்தில் கைது செய்தனர்.விசாரணையில், இவர் கூகி தேசிய ராணுவம் பர்மா பிரிவைச் சேர்ந்தவர் என்பதும், இந்தியா - மியான்மர் எல்லையில், மோரே - சுராசந்த்பூர் வரை ஆயுதங்களை வழங்குவதற்காக உளவு பார்த்ததும் தெரிய வந்தது.இது குறித்து முதல்வர் பைரேன் சிங் நேற்று கூறியதாவது:மணிப்பூரின் தற்போதைய நிலைமைக்கு, வெளிநாட்டு சக்திகள் தான் காரணம் என, துவக்கத்தில் இருந்தே நான் கூறி வருகிறேன். ஆனால், இதை மக்கள் நம்பவில்லை. தற்போது, மணிப்பூரில் செயல்படும் பயங்கரவாதிகளுக்கு ஆயுதம் வழங்கியதற்காக, ஆதாரங்களுடன் வெளிநாட்டவரை அசாம் ரைபிள்ஸ் படையினர் கைது செய்துள்ளனர். நான் கூறியது உண்மை என்பது தற்போது நிரூபணமாகி உள்ளது.இவ்வாறு அவர் கூறினார்.








      Dinamalar
      Follow us