sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஐ.ஏ.எஸ்., அதிகாரி மீது வழக்கு தொடர வி.கே.சக்சேனா அனுமதி

/

ஐ.ஏ.எஸ்., அதிகாரி மீது வழக்கு தொடர வி.கே.சக்சேனா அனுமதி

ஐ.ஏ.எஸ்., அதிகாரி மீது வழக்கு தொடர வி.கே.சக்சேனா அனுமதி

ஐ.ஏ.எஸ்., அதிகாரி மீது வழக்கு தொடர வி.கே.சக்சேனா அனுமதி


ADDED : ஆக 09, 2024 02:16 AM

Google News

ADDED : ஆக 09, 2024 02:16 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

சிவில் லைன்ஸ்,:தன் வருடாந்திர செயல்திறன் மதிப்பீட்டு அறிக்கையில், இரண்டு யூனியன் பிரதேசங்களின் மூன்று தலைமைச் செயலர்களின் கையெழுத்தைப் போலியாகப் போட்டதாக, ஐ.ஏ.எஸ்., அதிகாரி உதித்பிரகாஷ் ராய் மீது வழக்குத் தொடர, துணைநிலை கவர்னர் வி.கே. சக்சேனா அனுமதிஅளித்துள்ளார்.

ஐ.ஏ.எஸ்., அதிகாரி உதித் பிரகாஷ் ராய் மீது வழக்குத் தொடர, துணைநிலை கவர்னர் வி.கே. சக்சேனா அனுமதி அளித்துள்ளார்.

அடுத்த கட்ட நடவடிக்கைக்காக உள்துறை அமைச்சகத்துக்கு அவர் பரிந்துரை செய்துள்ளார்.

2007 கால ஐ.ஏ.எஸ்., அதிகாரியான ராய்,2017 மற்றும் 2021க்கு இடையில் இந்தமோசடியை செய்ததாககுற்றச்சாட்டு எழுந்தது.

டில்லி அரசின் சிறப்பு செயலர் (விஜிலென்ஸ்) புகாரின் பேரில், ஐ.பி., எஸ்டேட் காவல் நிலையத்தில் ராய் மீது கிரிமினல் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

டில்லி குடிநீர் வாரியத்தின் தலைமை நிர்வாக அதிகாரியாக பணியாற்றியபோது, டில்லி ஜல்விஹாரில் உள்ள அதிகாரப்பூர்வ இல்லத்தை கட்டுவதற்காக, 5 கோடி ரூபாய்க்கு பாரம்பரிய கட்டடத்தை இடித்ததாகவும் அவர் மீது குற்றச்சாட்டு உள்ளது.






      Dinamalar
      Follow us