ADDED : ஆக 08, 2024 01:15 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி,
'வயநாடு நிலச்சரிவு பாதிப்பை தேசிய பேரிடராக அறிவிக்க வேண்டும்' என, மத்திய அரசுக்கு எதிர்க்கட்சி தலைவர் ராகுல் கோரிக்கை விடுத்துள்ளார்.
காங்கிரஸ் எம்.பி.,யும், எதிர்க்கட்சி தலைவருமான ராகுல். லோக்சபாவில் நேற்று பேசியதாவது:
வயநாடு நிலச்சரிவு பாதிப்புகளை நேரில் பார்த்தேன். பாதிக்கப்பட்ட மக்களுக்கான நிவாரணத் தொகையை, அதிகரித்து வழங்குவதுடன் மீள் உருவாக்கம் செய்ய கூடுதல் நிதி ஒதுக்க வேண்டும். மேலும் வயநாடு பேரிடரை தேசிய பேரிடராக மத்திய அரசு அறிவிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் பேசினார்.