sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

மத்திய அரசின் நிலை என்ன? கருத்து கேட்கிறது கோர்ட்

/

மத்திய அரசின் நிலை என்ன? கருத்து கேட்கிறது கோர்ட்

மத்திய அரசின் நிலை என்ன? கருத்து கேட்கிறது கோர்ட்

மத்திய அரசின் நிலை என்ன? கருத்து கேட்கிறது கோர்ட்


ADDED : மே 16, 2024 01:57 AM

Google News

ADDED : மே 16, 2024 01:57 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி:தேசியக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டதை அடுத்து, ஆம் ஆத்மி கட்சிக்கான அலுவலகம் அமைக்க இடம் ஒதுக்குவது குறித்து மத்திய அரசின் நிலைப்பாட்டை தெரிவிக்கும்படி டில்லி உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

தேசியக் கட்சியாக அங்கீகரிக்கப்பட்டதை அடுத்து, டில்லியின் மையப்பகுதியில் கட்சி அலுவலகம் கட்ட இடம் ஒதுக்கக்கோரி மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்திடம் ஆம் ஆத்மி சார்பில் மனு அளிக்கப்பட்டது. இந்த மனுவை கடந்த ஆண்டு ஜூன் 26, செப்டம்பர் 15 ஆகிய தேதிகளில் அமைச்சகம் நிராகரித்தது.

தீன் தயாள் உபாத்யாய் மார்க்கிலோ அல்லது டில்லியின் மையப் பகுதியில் அமைந்துள்ள பிற இடங்களிலோ காலி நிலம் எதுவும் இல்லை என, மத்திய அமைச்சகம் கூறியது.

இதையடுத்து தேசிய தலைநகரில் தங்கள் கட்சியின் அலுவலகம் கட்ட 1,000 ச.மீ., இடம் ஒதுக்க, மத்திய அரசுக்கு உத்தரவிடக் கோரி, உயர் நீதிமன்றத்தில் ஆம் ஆத்மி கடந்த ஆண்டு மனுத்தாக்கல் செய்திருந்தது.

இந்த வழக்கு நீதிபதி சுப்பிரமணியம் பிரசாத் தலைமையிலான அமர்வு முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. இந்த விவகாரத்தில் மத்திய அரசின் நிலைப்பாடு அறிய விரும்புவதாகக் கூறி, வழக்கின் விசாரணையை நீதிபதி ஒத்திவைத்தார்.






      Dinamalar
      Follow us