sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

புதன், அக்டோபர் 08, 2025 ,புரட்டாசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

வளர்ச்சி பணி ஆலோசனை கூட்டம் எப்போது? கோலார் பொறுப்பு அமைச்சர் மீது அதிருப்தி!

/

வளர்ச்சி பணி ஆலோசனை கூட்டம் எப்போது? கோலார் பொறுப்பு அமைச்சர் மீது அதிருப்தி!

வளர்ச்சி பணி ஆலோசனை கூட்டம் எப்போது? கோலார் பொறுப்பு அமைச்சர் மீது அதிருப்தி!

வளர்ச்சி பணி ஆலோசனை கூட்டம் எப்போது? கோலார் பொறுப்பு அமைச்சர் மீது அதிருப்தி!


ADDED : ஜூலை 12, 2024 06:59 AM

Google News

ADDED : ஜூலை 12, 2024 06:59 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

கோலார்: கோலார் மாவட்ட வளர்ச்சி பணிகள் குறித்த ஆலோசனை கூட்டத்தை, மாவட்ட பொறுப்பு அமைச்சர் பைரதி சுரேஷ் நடத்தாததால் எதிர்க்கட்சியினர் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இதுகுறித்து, எதிர்க்கட்சியினர் கூறியதாவது:

கோலார் மாவட்ட பொறுப்பு அமைச்சர், பெங்களூரைச் சேர்ந்த பைரதி சுரேஷ். இவர் கோலார் வளர்ச்சி பணிகள் குறித்து, மாவட்ட அரசு அதிகாரிகள், மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்கும் கூட்டங்களை நடத்தி இருக்க வேண்டும்.

பணிகள் முடக்கம்


அரசின் திட்டங்கள் மக்களை சென்றடைகிறதா; அதிகாரிகளின் செயல்பாடுகள் என்ன; தொகுதி தோறும் உள்ள பிரச்னைகளுக்கு என்ன தீர்வு; டெங்கு தொற்று நோய் பரவலை தடுக்க என்ன நடவடிக்கை; சிதிலமடைந்த பள்ளி கட்டடங்கள்; அதிகாரிகள் அலப்பறைகளால் நகராட்சி, டவுன் சபைகளில் மக்கள் அவதி; அரசு பணிகள் முடக்கம்.

விவசாயிகளின் பிரச்னைகள்; விதை, உரம், பால், உணவுப் பொருட்கள் உட்பட அத்தியாவசிய பொருட்கள் விலை அதிகரிப்பு; இந்திரா உணவகம் திறக்கப்படாதது; மருத்துவமனைகளில் டாக்டர்கள், ஊழியர்கள் பற்றாக்குறை; நிலம் ஆக்கிரமிப்புகள்; முதியோர், விதவை, மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவி பென்ஷன், ரேஷன் கார்டுகள் வழங்காதது என துறைதோறும் பல பிரச்னைகள் உள்ளன.

இது பற்றி தீர்வு காண, மாவட்ட பொறுப்பு அமைச்சர், ஆலோசனை கூட்டம் நடத்த வேண்டும். ஆனால், கர்நாடக வளர்ச்சி திட்ட ஆய்வுக் கூட்டம் நடந்தால் மட்டுமே, அதில் எடுக்கப்படும் தீர்மானத்தின் படி, கலெக்டர் உட்பட மாவட்ட அதிகாரிகளிடம் கேள்வி கேட்க முடியும் என்று கோலார் மாவட்ட எம்.எல்.ஏ.,க்கள், தங்களின் அதிருப்தியை வெளிப்படுத்தி உள்ளனர்.

கோலார் மாவட்டத்தில், 'மக்கள் தரிசனம்' நிகழ்ச்சி, கடந்த ஆண்டு செப்டம்பர் 25ல் நடந்தது. அதன்பின், நடத்தப்படவில்லை. கோலார் மாவட்டத்தில் ஒவ்வொரு தொகுதிக்கும் எவ்வளவு நிதி வழங்கப்பட்டது. அதில் முறையாக வேலைகள் நடந்துள்ளதா என்பதையும் வெளிப்படையாக தெரிவிக்க கூட்டம் நடத்தி இருக்க வேண்டும்.

ஆர்வம் இல்லை


ஆனால், பைரதி சுரேஷ், ஏனோ தானோ என்றபடி, மாவட்ட பொறுப்பு அமைச்சர் மகுடத்தை மட்டும் சூடித் கொண்டுள்ளாரே தவிர, வளர்ச்சி பணிகள் பற்றி அறிய ஆர்வம் காட்டவில்லை.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

உள் நோக்கம்

அரசு திட்டங்கள் பற்றி மக்களுக்கு தெரிவிக்க நடப்பது தான், மாவட்ட வளர்ச்சி திட்ட பணிகள் குறித்த ஆய்வுக் கூட்டம். இதன் வாயிலாக மக்களின் பிரச்னைகளை அறிந்து தீர்க்கவும் முடியும். இதுவரை நடத்தாதது, ஏதோ உள்நோக்கம் கொண்டதாக தெரிகிறது.

- மல்லேஸ் பாபு, எம்.பி., - ம.ஜ.த., கோலார்

மக்களை ஏமாற்றுவதா?

கோலார் மாவட்ட வளர்ச்சி பணிகள் மீது அக்கறை இல்லையென்றால், வேறொருவரிடம் பொறுப்பை கொடுக்கலாமே. சில துறைகளில் என்ன வேலைகள் நடக்கின்றன என்பதே தெரிவதில்லை. 'ஜனதா தர்ஷன்' நடத்தாமல் இருப்பது மக்களை ஏமாற்றும் வேலையாகும்.

- கோவிந்தராஜ், எம்.எல்.சி., - ம.ஜ.த.,






      Dinamalar
      Follow us