ADDED : ஜூலை 29, 2024 06:40 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
தாவணகெரே, : தாவணகெரேவில் சமூக நலத்துறை அமைச்சர் மஹாதேவப்பா அளித்த பேட்டி:
பிற்படுத்தப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்கப்பட்ட நிதி, வேறு திட்டங்களுக்கு பயன்படுத்தப்படவில்லை. இந்த பிரிவினருக்கான நிதி தவறாக பயன்படுத்தவில்லை. துறை வாரியாக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. தேவைக்கு தகுந்தபடி வழங்கப்படுமே தவிர, நிதி வழங்குவது நிறுத்தப்படவில்லை.
கர்நாடகாவில் 821 உறைவிட பள்ளிகள் உள்ளன. இவற்றில் 600 பள்ளிகளுக்கு, சொந்த கட்டடம் உள்ளன. மற்றவை வாடகை கட்டடங்களில் செயல்படுகின்றன. 36 இடங்களில் இடம் கிடைத்துள்ளது. இங்கு உறைவிட பள்ளி கட்டடம் கட்டப்படுகிறது. இடம் இல்லாத கட்டடங்களுக்கு, இடத்தை தேடுகிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

