sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

4 ஆண்டுகளில் என்.ஆர்.ஏ., ஒரு தேர்வை கூட நடத்தவில்லை ஏன்?: கார்கே கேள்வி

/

4 ஆண்டுகளில் என்.ஆர்.ஏ., ஒரு தேர்வை கூட நடத்தவில்லை ஏன்?: கார்கே கேள்வி

4 ஆண்டுகளில் என்.ஆர்.ஏ., ஒரு தேர்வை கூட நடத்தவில்லை ஏன்?: கார்கே கேள்வி

4 ஆண்டுகளில் என்.ஆர்.ஏ., ஒரு தேர்வை கூட நடத்தவில்லை ஏன்?: கார்கே கேள்வி

4


ADDED : ஜூலை 14, 2024 03:32 PM

Google News

ADDED : ஜூலை 14, 2024 03:32 PM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: கடந்த 4 ஆண்டுகளில் என்.ஆர்.ஏ., எனப்படும் தேசிய பணியாளர் தேர்வு முகமை ஏன் ஒரு தேர்வை கூட நடத்தவில்லை? என காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து, அவர் எக்ஸ் சமூகவலைதளத்தில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: கடந்த 2020ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம், கோடிக்கணக்கான இளைஞர்களுக்கு என்.ஆர்.ஏ., ஒரு வரப்பிரசாதமாக இருக்கும். இது வெளிப்படைத்தன்மைக்கு ஒரு பெரிய ஊக்கத்தை அளிக்கும் என பிரதமர் மோடி கூறியிருந்தார். இது குறித்து நான் 3 கேள்விகள் கேட்க விரும்புகிறேன்.

* கடந்த 4 ஆண்டுகளில் என்.ஆர்.ஏ., எனப்படும் தேசிய பணியாளர் தேர்வு முகமை ஏன் ஒரு தேர்வை கூட நடத்தவில்லை?.

* என்.ஆர்.ஏ.,க்கு ரூ.1,517.57 கோடி நிதி வழங்கினாலும், 4 ஆண்டுகளில் இதுவரை ரூ.58 கோடி மட்டுமே செலவிடப்பட்டது ஏன்?

* என்.ஆர்.ஏ., அரசு வேலைகளுக்கான ஆட்சேர்ப்புக்கான அமைப்பாக உருவாக்கப்பட்டது. எஸ்.சி, எஸ்.டி, ஓ.பி.சி., மற்றும் பொருளாதாரத்தில் பின் தங்கிய இளைஞர்களின் இடஒதுக்கீட்டு உரிமையைப் பறிக்கும் வகையில் வேண்டுமென்றே என்.ஆர்.ஏ., செயலிழக்கச் செய்யப்பட்டதா?.

கல்வி முறையை அழித்து இளைஞர்களின் எதிர்காலத்தை அழிக்கும் செயலை பா.ஜ., மற்றும் ஆர்.எஸ்.எஸ்., செய்து வருகிறது. என்.ஆர்.ஏ., பிரச்னையை நாங்கள் முன்பே எழுப்பி இருந்தோம். ஆனால் பா.ஜ., அரசு மவுனம் காத்து வருகிறது. இவ்வாறு கார்கே கூறியுள்ளார்.






      Dinamalar
      Follow us