sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

செவ்வாய், டிசம்பர் 16, 2025 ,மார்கழி 1, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பிரகாஷ் ராஜ் மவுனம் ஏன்? நடிகர் பிரதம் காட்டம்!

/

பிரகாஷ் ராஜ் மவுனம் ஏன்? நடிகர் பிரதம் காட்டம்!

பிரகாஷ் ராஜ் மவுனம் ஏன்? நடிகர் பிரதம் காட்டம்!

பிரகாஷ் ராஜ் மவுனம் ஏன்? நடிகர் பிரதம் காட்டம்!


ADDED : ஏப் 22, 2024 07:05 AM

Google News

ADDED : ஏப் 22, 2024 07:05 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு: ''அனைத்து விஷயத்துக்கும், கருத்து கூறும் நடிகர்கள் பிரகாஷ் ராஜ், சேத்தன் அஹிம்சா, மாணவி நேஹா கொலை குறித்து வாய் திறக்காதது ஏன்,'' என நடிகர் பிரதம் கேள்வி எழுப்பியுள்ளார்.

ஹூப்பள்ளியில், கல்லுாரி மாணவி நேஹா, சில நாட்களுக்கு முன் கல்லுாரி வளாகத்திலேயே கொலை செய்யப்பட்டார். இவரை கொலை செய்த பயாஸ் கைது செய்யப்பட்டார்.

இது தொடர்பாக, நடிகர் பிரதம் கூறியதாவது:

மாணவி நேஹாவை கொலை செய்தவரை, கடுமையாக தண்டிக்க வேண்டும். நேஹாவின் குடும்பத்தினருக்கு நீதி கிடைக்க வேண்டும்.

ஒவ்வொரு விஷயத்துக்கும், பிரதமர் நரேந்திர மோடியை பற்றி நடிகர் பிரகாஷ் ராஜ் விமர்சிப்பார். நமது மண்ணின் மகள் நேஹா கொலை செய்யப்பட்டும், பிரகாஷ் ராஜ் ஏன் குரல் எழுப்பவில்லை.

நடிகர் சேத்தன் அஹிம்சாவும், வாய் திறக்காமல் மவுனமாக இருக்கிறார். பெயரில் மட்டும் அஹிம்சையை வைத்திருந்தால் போதாது. இத்தகைய சம்பவங்கள் நடக்கும் போது, கண்டிக்க வேண்டும். சேத்தனும், பிரகாஷ் ராஜும் தங்களின் வசதிக்கு ஏற்ப பேசுவதை நிறுத்த வேண்டும்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us