sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், டிசம்பர் 22, 2025 ,மார்கழி 7, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஏன் ஜாமின் கேட்கவில்லை? கெஜ்ரிவாலுக்கு கோர்ட் கேள்வி!

/

ஏன் ஜாமின் கேட்கவில்லை? கெஜ்ரிவாலுக்கு கோர்ட் கேள்வி!

ஏன் ஜாமின் கேட்கவில்லை? கெஜ்ரிவாலுக்கு கோர்ட் கேள்வி!

ஏன் ஜாமின் கேட்கவில்லை? கெஜ்ரிவாலுக்கு கோர்ட் கேள்வி!


ADDED : ஏப் 30, 2024 01:31 AM

Google News

ADDED : ஏப் 30, 2024 01:31 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி, 'மதுபான ஊழல் வழக்கில் ஏன் ஜாமின் கேட்கவில்லை' என்று, டில்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு, உச்ச நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது.

மதுபான ஊழல் வழக்கில் அமலாக்கத் துறையால் கைது செய்யப்பட்டது மற்றும் அதன் காவலில் விசாரிக்க அனுமதிக்கப்பட்டதை எதிர்த்து, ஆம் ஆத்மி ஒருங்கிணைப்பாளரும், டில்லி முதல்வருமான அரவிந்த் கெஜ்ரிவால் உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.

இந்த வழக்கு, நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, திபாங்கர் தத்தா அமர்வில் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது, 'இந்த வழக்கில் ஜாமின் கேட்டு, ஏன் விசாரணை நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யவில்லை' என, அமர்வு கேள்வி எழுப்பியது.

இதற்கு, அரவிந்த் கெஜ்ரிவால் சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அபிஷேக் சிங்வி, தன் வாதத்தில் கூறியுள்ளதாவது:

ஜாமின் கேட்டு நாங்கள் மனு தாக்கல் செய்யவில்லை. இதற்கு பல காரணங்கள் உள்ளன. முக்கியமான காரணம், இது சட்டத்துக்கு எதிரான கைது நடவடிக்கை என்பதுதான். அதனால்தான், அதை எதிர்த்து வழக்கு தொடர்ந்துள்ளோம்.

இவ்வாறு அவர் வாதிட்டார்.






      Dinamalar
      Follow us