sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, நவம்பர் 08, 2025 ,ஐப்பசி 22, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ராஜ்யசபாவுக்கு நீதிபதிகளில் ஒருவர் ஏன் நியமிக்கப்பட்டார்?: கார்கே கேள்வி

/

ராஜ்யசபாவுக்கு நீதிபதிகளில் ஒருவர் ஏன் நியமிக்கப்பட்டார்?: கார்கே கேள்வி

ராஜ்யசபாவுக்கு நீதிபதிகளில் ஒருவர் ஏன் நியமிக்கப்பட்டார்?: கார்கே கேள்வி

ராஜ்யசபாவுக்கு நீதிபதிகளில் ஒருவர் ஏன் நியமிக்கப்பட்டார்?: கார்கே கேள்வி

5


ADDED : மார் 29, 2024 11:33 AM

Google News

ADDED : மார் 29, 2024 11:33 AM

5


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

புதுடில்லி: ராஜ்யசபாவுக்கு நீதிபதிகளில் ஒருவர் ஏன் நியமிக்கப்பட்டார்? என பிரதமர் மோடிக்கு காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே கேள்வி எழுப்பி உள்ளார்.

இது குறித்து கார்கே கூறியிருப்பதாவது: 4 மூத்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள் சுதந்திர நீதித்துறை முக்கியமானது என தெரிவித்து இருந்தனர். நீதிபதிகளில் ஒருவர் உங்கள் அரசால் ராஜ்யசபாவிற்கு நியமிக்கப்பட்டார். எனவே யார் 'உறுதியான நீதித்துறையை' விரும்புகிறார்?

தற்போதைய லோக்சபா தேர்தலுக்கு உங்கள் கட்சி மேற்கு வங்கத்தில் முன்னாள் உயர்நீதிமன்ற நீதிபதியை வேட்பாளராக நிறுத்தியதை மறந்துவிட்டீர்கள். தேசிய நீதிபதிகள் நியமன ஆணையத்தை கொண்டு வந்தவர் யார்? ஏன் உச்ச நீதிமன்றத்தால் முடக்கப்பட்டது?

உங்கள் சொந்த பாவங்களுக்காக காங்கிரஸ் கட்சியின் மீது பழி சுமத்துவதை நிறுத்துங்கள். ஜனநாயகத்தை கையாள்வதிலும், அரசியலமைப்பை புண்படுத்தும் கலையிலும் நீங்கள் தேர்ச்சி பெற்றிருக்கிறீர்கள்!. இவ்வாறு கார்கே கூறினார்.






      Dinamalar
      Follow us