sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

சனி, அக்டோபர் 04, 2025 ,புரட்டாசி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

கணவர் கொலை மனைவி கைது

/

கணவர் கொலை மனைவி கைது

கணவர் கொலை மனைவி கைது

கணவர் கொலை மனைவி கைது

4


ADDED : பிப் 10, 2025 05:43 AM

Google News

ADDED : பிப் 10, 2025 05:43 AM

4


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெலகாவி: குடிகார கணவரை கொன்று விட்டு குழந்தைகளுடன் தப்பியோடிய மனைவியை, போலீசார் கைது செய்தனர்.

பெலகாவி நகரின் ராமதீர்த்த நகரில் வசித்தவர் அமித், 34. இவரது மனைவி ஆஷா, 30. இவர்களுக்கு இரண்டு குழந்தைகள். அமித் 'டிவி' ரிப்பேர் செய்யும் வேலை செய்தார்.

சரியாக பணிக்கு செல்வது இல்லை. குடிப்பழக்கத்துக்கு அடிமையான இவர், தினமும் போதையில் வீட்டுக்கு வந்து, மனைவி, குழந்தைகளை சித்ரவதை செய்வார்.

ஆஷா, கார்மென்ட்ஸ் நிறுவனத்தில் பணியாற்றி, குடும்பத்தை காப்பாற்றினார். ஒரு வாரமாக அமித்தின் தொந்தரவு மிக அதிகமாக இருந்தது.

இவரது செயலால் கோபமடைந்த வீட்டு உரிமையாளர், வீட்டை காலி செய்யும்படி கட்டாயப்படுத்தினார்.

நேற்று முன் காலை, அளவுக்கு அதிகமாக மது அருந்தி வந்த அமித், மனைவியுடன் தகராறு செய்தார். வீட்டில் இருந்த பொருட்களை வெளியே வீசினார். ஜன்னல் கண்ணாடிகளை உடைத்தார்.

பொறுமை இழந்த ஆஷா, கூரான ஆயுதத்தால் கணவரை குத்தி, கொலை செய்துவிட்டு வீட்டை வெளிப்புறமாக பூட்டி கொண்டு இரண்டு குழந்தைகளை அழைத்து கொண்டு தப்பி சென்றார்.

இவர்களின் வீட்டில் ஜன்னல் கண்ணாடிகள் உடைந்து கிடந்ததை கவனித்த அக்கம், பக்கத்தினர் ஜன்னல் வழியாக உள்ளே பார்த்த போது, அமித் கொலையாகி கிடந்தது தெரிந்தது.

உடனடியாக மாளமாருதி போலீசாருக்கு தகவல் கொடுத்தனர். அங்கு வந்த போலீசார், பூட்டை உடைத்து உடலை மீட்டனர். தலைமறைவாக இருந்த ஆஷாவை கைது செய்தனர்.






      Dinamalar
      Follow us