sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, அக்டோபர் 03, 2025 ,புரட்டாசி 17, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஓய்வு பெற்ற மூன்று மாதத்திற்குள் ம.பி., நீதிபதி பா.ஜ.,வில் ஐக்கியம்

/

ஓய்வு பெற்ற மூன்று மாதத்திற்குள் ம.பி., நீதிபதி பா.ஜ.,வில் ஐக்கியம்

ஓய்வு பெற்ற மூன்று மாதத்திற்குள் ம.பி., நீதிபதி பா.ஜ.,வில் ஐக்கியம்

ஓய்வு பெற்ற மூன்று மாதத்திற்குள் ம.பி., நீதிபதி பா.ஜ.,வில் ஐக்கியம்

9


UPDATED : ஜூலை 14, 2024 08:17 PM

ADDED : ஜூலை 14, 2024 08:08 PM

Google News

UPDATED : ஜூலை 14, 2024 08:17 PM ADDED : ஜூலை 14, 2024 08:08 PM

9


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

போபால்: ம.பி., மாநில ஐகோர்ட்டின் முன்னாள் நீதிபதி ரோஹித் ஆர்யா ஓய்வு பெற்ற மூன்று மாதத்திற்குள் பா.ஜ.,வில் இணைந்தார்.

ம.பி., மாநில ஐகோர்ட்டின் இந்தூர் கிளையின் நீதிபதியாக பணியாற்றியவர் ரோஹித் ஆர்யா கடந்த ஏப்ரலில் பணி ஓய்வு பெற்றார். மூன்று மாதத்திற்குள்ளாக பா.ஜ,,வில் இணைந்துள்ளார்.

தலைநகர் போபாலில் உள்ள கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற மூன்று குற்றவியல் சட்டங்கள் குறித்த கருத்தரங்கில் கலந்து கொண்டார். பின்னர் பா.ஜ.,வில் தன்னை இணைத்து கொண்டார். அவரை மாநில பொறுப்பாளர் ராகவேந்திரா சர்மா வரவேற்றார்.

முன்னதாக கடந்த 2020 ம் ஆண்டில் பெண்ணிற்கு எதிரான குற்ற வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கு ஜாமின் வழங்கிய விவகாரத்தில் ரோஹித் ஆர்யா குற்றம் சாட்டப்பட்டார். இவர் ஜாமின் வழங்கிய விவகாரம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதனையடுத்து சுப்ரீம் கோர்ட் நேரடியாக தலையிட்டது. தொடர்ந்து ஜாமினை ரத்து செய்தது. தொடர்ந்து பெண்களுக்கு எதிரான குற்றங்கள் தொடர்பான வழக்குகளில் ஜாமின் மனுக்களை கையாள்வது குறித்து கீழ் நீதிமன்றங்களுக்கு உத்தரவுகளை பிறப்பித்தது.

62 வயதான நீதிபதி ஆர்யா 1984-ம் ஆண்டு வக்கீலாக பதிவு செய்தார். தொடர்ந்து 2003-ல் ம.பி.,ஐகோர்ட்டில் மூத்த வக்கீலாக நியமிக்கப்பட்டார். தொடர்ந்து 2013-ல் மாநில ஐகோர்ட் நீதிபதியாகவும், 2015-ல் நிரந்தர நீதிபதியாகவும் பதவியேற்றார். 2024 ஏப்ரலில் ஓய்வு பெற்றார்.






      Dinamalar
      Follow us