sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ரூ.4.95 லட்சம் மோசடி செய்த பெண் கைது

/

ரூ.4.95 லட்சம் மோசடி செய்த பெண் கைது

ரூ.4.95 லட்சம் மோசடி செய்த பெண் கைது

ரூ.4.95 லட்சம் மோசடி செய்த பெண் கைது


ADDED : மார் 12, 2025 10:30 PM

Google News

ADDED : மார் 12, 2025 10:30 PM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பாலக்காடு; பங்குச்சந்தையில் முதலீடு செய்து பணம் சம்பாதிக்கலாம் என, வாக்குறுதி அளித்து ஏமாற்றிய பெண்ணை போலீசார் கைது செய்தனர்.

கேரள மாநிலம், பாலக்காடு மாவட்டம், வடக்கஞ்சேரி கரயங்காடு பகுதியைச் சேர்ந்தவர் முகமது சப்வான்.

இவர், பங்குச்சந்தையில் முதலீடு செய்து பணம் சம்பாதிக்கலாம் என வாக்குறுதி அளித்து, தன்னை ஒரு பெண் ஏமாற்றி பணம் பறித்ததாக வடக்கஞ்சேரி போலீசாரிடம் புகார் அளித்தார்.

வழக்குப்பதிவு செய்து, இன்ஸ்பெக்டர் பென்னி தலைமையிலான போலீசார் நடத்திய விசாரணையில், கோதமங்கலம் அய்யங்காவு பகுதியைச் சேர்ந்த அனுபமா, 36, என்பவர் பணம் பறித்தது தெரியவந்தது.

இதையடுத்து, அவர் இருக்கும் இடத்தை கண்டுபிடித்து, நேற்று கைது செய்தனர். ஆலத்தூர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.

இன்ஸ்பெக்டர் பென்னி கூறுகையில், ''2024 செப்., முதல் டிச., மாதம் வரை, பல்வேறு நாட்களில் பங்குச்சந்தையில் முதலீடு செய்து லாபத்தை ஈட்டலாம் என வாக்குறுதி அளித்து, முகமது சப்வானிடம் இருந்து 4.95 லட்சம் ரூபாயை அனுபமா பறித்துள்ளது விசாரணையில் தெரிந்தது. இதுபோல், மாநிலத்தின் பல பகுதிகளில் அவர் பண மோசடி செய்துள்ளார்,'' என்றார்.






      Dinamalar
      Follow us