sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

ஞாயிறு, அக்டோபர் 05, 2025 ,புரட்டாசி 19, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் சுட்டுப்பிடிப்பு 

/

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் சுட்டுப்பிடிப்பு 

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் சுட்டுப்பிடிப்பு 

சிறுமியை கர்ப்பமாக்கிய வாலிபர் சுட்டுப்பிடிப்பு 


ADDED : மே 05, 2024 05:49 AM

Google News

ADDED : மே 05, 2024 05:49 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஹூப்பள்ளி: சிறுமியை கர்ப்பமாக்கிய வழக்கில் கைது செய்தபோது, போலீஸ் ஏட்டை கத்தியால் குத்திவிட்டு தப்ப முயன்ற, வாலிபர் சுட்டுபிடிக்கப்பட்டார்.

ஹூப்பள்ளி நவநகரில் சதாம் உசேன், 22. இவரும் வேறு சமூகத்தை சேர்ந்த 15 வயது, சிறுமியும் காதலித்தனர். சிறுமியை, சதாம் உசேன் அடிக்கடி மிரட்டி, பலாத்காரம் செய்து உள்ளார். இதுபற்றி பெற்றோரிடம் கூறினால், கொன்று விடுவேன் என்றும் மிரட்டி உள்ளார். இதனால் பயந்து போன சிறுமி, யாரிடமும் சொல்லவில்லை.

இரண்டு நாட்களுக்கு முன்பு, சிறுமிக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டது. அவரை பெற்றோர் மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.

பரிசோதனையில் அவர் கர்ப்பமாக இருப்பது தெரிந்தது. பெற்றோர் கேட்டபோது, சதாம் உசேன் மிரட்டி பலாத்காரம் செய்தது பற்றி கூறினார். நவநகர் போலீஸ் நிலையத்தில் வழக்கு பதிவானது. சதாம் உசேனை போலீசார் தேடினர்.

ஹூப்பள்ளி வித்யாநகர் பகுதியில் பதுங்கி இருப்பதாக, நவநகர் இன்ஸ்பெக்டர் சங்கமேஸ்வருக்கு தகவல் கிடைத்தது. நேற்று காலை, வித்யாநகருக்கு போலீசார் சென்றனர்.

பாழடைந்த வீட்டில் பதுங்கி இருந்த, சதாம் உசேன் கைது செய்யப்பட்டார். ஜீப்பில் ஏற்றும்போது, ஏட்டு அருணை கத்தியால் குத்திவிட்டு தப்பினார்.

அதிர்ச்சி அடைந்த இன்ஸ்பெக்டர் சங்கமேஸ்வர், துப்பாக்கியால் ஒரு ரவுண்டு வானத்தை நோக்கி சுட்டு, சரண் அடையுமாறு எச்சரித்தார். ஆனால் சதாம் உசேன் கேட்கவில்லை. இதனால் அவரது வலது காலில், இன்ஸ்பெக்டர் துப்பாக்கியால் சுட்டார்.

குண்டு அடிபட்டு சுருண்டு விழுந்த, சதாம் உசேனை போலீசார் கைது செய்தனர். ஹூப்பள்ளி கிம்ஸ் மருத்துவமனையில் சிகிச்சை பெறுகிறார். ஏட்டு அருணுக்கும் சிகிச்சைஅளிக்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us