ADDED : ஆக 23, 2024 09:08 PM

மும்பை
: “மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், என்னைப்
பற்றிய தகவல்களை துல்லியமாக அறியவே, 'இசட் பிளஸ்' பாதுகாப்பை
மத்திய அரசு வழங்கி உள்ளது,” என, சரத்சந்திர பவார் தேசியவாத காங்.,பிரிவின் தலைவர் சரத் பவார் தெரிவித்தார்.
மஹாராஷ்டிராவில், பிரதான எதிர்க்கட்சியான சரத்சந்திரபவார் தேசிவாத காங். கட்சியின்
சரத்
பவாரின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக கிடைத்த தகவலின்படி,
அவருக்கு, இசட் பிளஸ் பிரிவு பாதுகாப்பை வழங்கி, சமீபத்தில், மத்திய
உள்துறை அமைச்சகம் உத்தரவிட்டது.
இதன்படி, சி.ஆர்.பி.எப்.,
எனப்படும், மத்திய ரிசர்வ் போலீஸ் படையின் ஆயுதமேந்திய 55 வீரர்கள்,
24 மணி நேரமும், சுழற்சி முறையில் சரத் பவாருக்கு பாதுகாப்பு
வழங்குவர்.
இந்நிலையில், நவி மும்பையில், இசட் பிளஸ்
பாதுகாப்பு குறித்து, செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்கு, சரத்
பவார் அளித்த பதில்:மஹாராஷ்டிரா சட்டசபை தேர்தல் நெருங்கி வருகிறது.
இந்த நேரத்தில், நான் யாரை சந்திக்கிறேன்; எங்கு செல்கிறேன் என்பதை
அறிய, இசட் பிளஸ் பாதுகாப்பை மத்திய அரசு வழங்கி உள்ளது. என்னைப்
பற்றிய தகவல்களை அறிய அரசு மிகவும் ஆவலாக உள்ளது. இவ்வாறு அவர்
கூறினார்.