sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், அக்டோபர் 06, 2025 ,புரட்டாசி 20, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

ஆயுத ஆலையில் வெடி விபத்து ம.பி.,யில் 10 பேர் படுகாயம்

/

ஆயுத ஆலையில் வெடி விபத்து ம.பி.,யில் 10 பேர் படுகாயம்

ஆயுத ஆலையில் வெடி விபத்து ம.பி.,யில் 10 பேர் படுகாயம்

ஆயுத ஆலையில் வெடி விபத்து ம.பி.,யில் 10 பேர் படுகாயம்


ADDED : அக் 23, 2024 02:02 AM

Google News

ADDED : அக் 23, 2024 02:02 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

ஜபல்பூர்,மத்திய பிரதேசத்தின் ஜபல்பூர் மாவட்டத்தில் உள்ள கமாரியா பகுதியில், மத்திய பாதுகாப்பு நிறுவனத்தின் ஆயுத தொழிற்சாலை உள்ளது.

வெடிகுண்டுகள் மற்றும் வெடிமருந்துகள் தயாரிக்கப்படும் இந்த ஆலையில், நேற்று காலை ஏராளமான தொழிலாளர்கள் பணி செய்து கொண்டிருந்தனர்.

அப்போது, இங்குள்ள வெடிகுண்டுகள் நிரப்பும் பகுதியில் ஹைட்ராலிக் அமைப்பு சரியாக இயங்காததால் திடீரென வெடிவிபத்து ஏற்பட்டது. இது, 5 கி.மீ., சுற்றளவுக்கு பயங்கர சத்தத்துடன் வெடித்ததால், அப்பகுதி மக்கள் பூகம்பம் ஏற்பட்டதாக கருதி வீட்டில் இருந்து ஓட்டம் பிடித்தனர்.

இந்த விபத்தில், தொழிற்சாலையின் ஒரு பகுதி இடிந்து விழுந்தது; ஊழியர்கள் மூவர் உட்பட 10 பேர் படுகாயம் அடைந்தனர்.

தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்புத் துறையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டு, அருகேயுள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதித்துள்ளனர். அங்கு சிலரது நிலைமை கவலைக்கிடமாக இருப்பதால், அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்படுகிறது.






      Dinamalar
      Follow us