sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வியாழன், அக்டோபர் 02, 2025 ,புரட்டாசி 16, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

10 ஆண்டுகளில் மெட்ரோவில் 100 கோடி மக்கள் பயணம்

/

10 ஆண்டுகளில் மெட்ரோவில் 100 கோடி மக்கள் பயணம்

10 ஆண்டுகளில் மெட்ரோவில் 100 கோடி மக்கள் பயணம்

10 ஆண்டுகளில் மெட்ரோவில் 100 கோடி மக்கள் பயணம்


ADDED : ஜன 31, 2024 05:25 AM

Google News

ADDED : ஜன 31, 2024 05:25 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

பெங்களூரு : பொதுமக்களிடம் அமோக வரவேற்பை பெற்றுள்ள, மெட்ரோ ரயிலில் இதுவரை 100 கோடி பேர் பயணம் செய்துள்ளனர்.

இது தொடர்பாக, பி.எம்.ஆர்.சி.எல்., அதிகாரிகள் கூறியதாவது:

பெங்களூரு மெட்ரோ ரயில் கார்ப்பரேஷன் லிமிடெட், 2011 அக்டோபர் 20ல், மெட்ரோ ரயில் போக்குவரத்தைத் துவங்கியது.

அன்று முதல் இன்று வரை, 100 கோடி மக்கள் மெட்ரோ ரயில்களில் பயணித்துள்ளனர். இதன் மூலம் நம்ம மெட்ரோ புதிய மைல் கல்லை எட்டியது.

போக்குவரத்து சேவையில் மெட்ரோ குறிப்பிடத்தக்க வெற்றி அடைந்துள்ளது. பெங்களூரில் மக்களின் அங்கமாக மாறியுள்ளது. கடந்த 10 ஆண்டுகளாக, மக்களின் போக்குவரத்து தேவைகளை வழங்குவதில், மெட்ரோ முக்கிய பங்கு வகிக்கிறது.

போக்குவரத்து நெருக்கடியை குறைக்க உதவுகிறது. பயணியர் பாதுகாப்பாகவும், செல்ல வேண்டிய இடத்தை விரைந்து சென்றடையவும் செய்கிறது. சுற்றுச்சூழலுக்கு தகுந்தது.

தற்போது ஊதா மற்றும் பச்சை நிறப் பாதைகளில், மெட்ரோ ரயில் இயங்குகிறது. இன்னும் சில மாதங்களில் மஞ்சள் பாதையில் வர்த்தக போக்குவரத்து துவங்கும்.

இது தவிர நீல நிற பாதை, பிங் நிற பாதைகளில் மெட்ரோ பணிகள் தீவிரமாக நடக்கின்றன. புதிய மெட்ரோ பாதைகள் அமைப்பதுடன், தற்போதைய பாதைகள் விஸ்தரிக்கவும், நம்ம மெட்ரோ திட்டம் வகுத்துள்ளது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.






      Dinamalar
      Follow us