ADDED : மார் 28, 2024 09:35 AM

நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
புதுடில்லி: மகாத்மா காந்தி ஊரக வேலை வாய்ப்பு உறுதி திட்டத்தின் கீழ் செயல்படுத்தி வரும் 100 நாள் வேலைதிட்ட ஊதியம் உயர்த்தப்பட்டுள்ளது. இதற்கான உத்தரவை மத்திய அரசு பிறப்பித்துள்ளது.
இதன்படி தமிழகத்தில் பணியாளர்கள் இது வரை பெற்று வந்த 294 ரூபாய் 319 ஆக உயர்த்தப்படுகிறது. தேர்தல் நேரம் என்பதால் தேர்தல் கமிஷன் அனுமதி பெற்று வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.
தேர்தல் நேரத்தில் இதுபோன்ற அறிவிப்புகள் மக்களை ஏமாற்றும் செயல் என எதிர்கட்சியினர் குற்றம்சாட்டி உள்ளனர்.

