ADDED : மார் 05, 2024 11:07 PM

புதுடில்லி:''பெண்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கும் திட்டம் செப்டம்பர் அல்லது அக்டோபரில் செயல்பாட்டுக்கு வரும்,'' என, டில்லி நிதியமைச்சர் அதிஷி சிங் கூறினார்.
டில்லி சட்டசபையில் நேற்று முன் தினம் -பட்ஜெட் தாக்கல் செய்த அதிஷி, 18 வயது நிறைவடைந்த பெண்களுக்கு மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் வழங்கப்படும் என அறிவித்தார்.
இந்த திட்டம் தொடர்பாக, அதிஷி நேற்று கூறியதாவது:
டில்லியில் முக்ய மந்திரி மகிளா சம்மான் யோஜனா திட்டத்தின் கீழ் அறிவிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு மாதந்தோறும் 1,000 ரூபாய் வழங்கும் திட்டம், லோக்சபா தேர்தல் நடத்தை விதிமுறைகள் நீக்கப்பட்ட பின், செப்டம்பர்- அல்லது அக்டோபர் மாதத்தில் செயல்படுத்தப்படும்.
ஆம் ஆத்மி கட்சி வலுவாகவே இருக்கிறது. லோக்சபா தேர்தலில் டில்லி மற்றும் பஞ்சாபில் பா.ஜ.,வை நேரடியாகவே எதிர்க்கிறோம்.
இவ்வாறு அவர் கூறினார்.

