sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

திங்கள், செப்டம்பர் 08, 2025 ,ஆவணி 23, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

2 பெண்கள் உட்பட 12 நக்சல்கள் சரண்

/

2 பெண்கள் உட்பட 12 நக்சல்கள் சரண்

2 பெண்கள் உட்பட 12 நக்சல்கள் சரண்

2 பெண்கள் உட்பட 12 நக்சல்கள் சரண்


ADDED : ஜூலை 10, 2025 06:28 AM

Google News

ADDED : ஜூலை 10, 2025 06:28 AM


Google News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தண்டேவாடா : சத்தீஸ்கரில், இரு பெண்கள் உட்பட, 12 நக்சல்கள் போலீசில் சரண் அடைந்தனர்.

சத்தீஸ்கரின் தண்டேவாடா மாவட்டத்தில் நக்சலைட்டுகள் ஆயுதங்களை ஒப்படைத்து விட்டு, இயல்பு வாழ்க்கைக்கு திரும்பும் வகையில், 2020ல், 'வீடு திரும்புவோம்' திட்டம் மாநில அரசால் துவங்கப்பட்டது. இந்த திட்டத்தின் படி, தண்டேவாடா மாவட்டத்தில் நேற்று, 12 நக்சல்கள் போலீசில் சரணடைந்தனர். இவர்களில் ஒன்பது பேர், தலைக்கு 28 லட்சம் ரூபாய் பரிசாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இது குறித்து தண்டேவாடா எஸ்.பி., கவ்ரவ் ராய் கூறியதாவது:

தற்போது சரணடைந்துள்ள 12 நக்சல்களில், இருவர் பெண்கள். இதுவரை 1,005 நக்சல்கள், மாநில அரசின் புதிய திட்டத்தின் கீழ் சரண் அடைந்துள்ளனர்.

நக்சல் அமைப்புகளுக்குள் வளர்ந்துள்ள கருத்து வேறுபாடு, மாவோயிஸ்ட் சித்தாந்தங்களால் ஏற்பட்ட வெறுப்பு, தொடர்ந்து வனப் பகுதியில் தலைமறைவு வாழ்க்கை நடத்துவது போன்ற காரணங்களால் சரண் அடைந்ததாக நக்சல்கள் தெரிவித்தனர்.

இவ்வாறு அவர் கூறினார்.






      Dinamalar
      Follow us