sub-imageடைம்லைன்
sub-imageதினமலர் டிவி
sub-imagePodcast
sub-imageiPaper
sub-imageசினிமா
sub-imageகோயில்கள்
sub-imageபுத்தகங்கள்
sub-imageSubscription
sub-imageதிருக்குறள்
sub-imageகடல் தாமரை
Dinamalar Logo

வெள்ளி, ஜனவரி 02, 2026 ,மார்கழி 18, விசுவாவசு வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/

செய்திகள்

/

இந்தியா

/

பலத்த பாதுகாப்புடன் போலீஸ் தேர்வு 3,000 பேரில் 1,392 பேர் 'ஆப்சென்ட்'

/

பலத்த பாதுகாப்புடன் போலீஸ் தேர்வு 3,000 பேரில் 1,392 பேர் 'ஆப்சென்ட்'

பலத்த பாதுகாப்புடன் போலீஸ் தேர்வு 3,000 பேரில் 1,392 பேர் 'ஆப்சென்ட்'

பலத்த பாதுகாப்புடன் போலீஸ் தேர்வு 3,000 பேரில் 1,392 பேர் 'ஆப்சென்ட்'


ADDED : பிப் 26, 2024 07:25 AM

Google News

ADDED : பிப் 26, 2024 07:25 AM


Google News
Latest Tamil News
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற

தங்கவயல்: போலீஸ் ஏட்டு, மகளிர் போலீஸ் பணிக்கான எழுத்து தேர்வு தங்கவயலில் இரண்டு மையங்களில் பலத்த பாதுகாப்புடன் நடந்தது. 3,000 பேரில் 1,392 பேர் ஆப்சென்ட் ஆயினர்.

ராபர்ட்சன்பேட்டை ஸ்ரீ பகவான் மஹாவீர் ஜெயின் கல்லுாரி, உரிகம் முதல் நிலைக் கல்லூரி ஆகிய இரண்டு மையங்களில் தேர்வு மையம் அமைக்கப்பட்டிருந்தது. தேர்வு எழுத வந்த ஆண்கள் 'ஷூ'' அணியவும், பெண்கள் தாலியை தவிர, வேறு நகைகள் அணியவும் தடை விதிக்கப்பட்டிருந்தது.

நேற்று காலை 11:00 மணி - 12:30 மணி வரை தேர்வு நடந்தது. கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டிருந்தன.

*நான்கு மாத கை குழந்தையுடன் தேர்வு எழுத பிஜாப்பூரில் இருந்து பாக்யலட்சுமி என்ற பெண், தனது குழந்தை, தாயுடன் வந்திருந்தார். குழந்தையை தனது தாயிடம் கொடுத்து விட்டு தேர்வு எழுதினார். அதுவரை தாய், அங்கிருந்த அறையில் இருக்க அனுமதிக்கப்பட்டார்.

*உரிகம் கல்லுாரி தேர்வு மையத்திற்கு அரைமணி நேரம் தாமதமாக வந்த நபரை அனுமதிக்க வில்லை. கெஞ்சி பார்த்தும் அனுமதிக்காமல் தடுக்கப்பட்டார். மிகுந்த கட்டுப்பாட்டுடன் தேர்வு நடந்தது.

*தேர்வு எழுத விண்ணப்பித்தவர்கள் 3,000. இதில் தேர்வு எழுதியவர்கள் 1,608.

25.2.2024 / ஜெயசீலன்

26_DMR_0005, 26_DMR_0006

மகளிர் போலீஸ் பணிக்கு தேர்வு எழுத தனது நான்கு மாத கைக்குழந்தையுடன் பிஜாப்பூரில் இருந்து வந்த பெண் (அடுத்த படம்) தன் குழந்தையை தாயிடம் ஒப்படைத்து விட்டு தேர்வு எழுதினார்.

26_DMR_0007

போலீசார் சோதனைக்கு பிறகு தேர்வு எழுத அனுமதிக்கப்பட்டனர். இடம்: உரிகம் முதல் நிலைக் கல்லுாரி தேர்வு மையம்






      Dinamalar
      Follow us