UPDATED : ஜூலை 12, 2024 11:16 AM
ADDED : ஜூலை 12, 2024 07:09 AM

இந்துார்: நம் நாட்டில் 120 கோடி அலைபேசிகள் பயன்பாட்டில் உள்ளதாக, மத்திய தகவல் தொடர்புத்துறை அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா தெரிவித்தார்.
இது குறித்து செய்தியாளர்களிடம் நேற்று அவர் கூறியதாவது: நம் நாட்டில் 120 கோடி அலைபேசிகள் பயன்பாட்டில் உள்ளன. நாடு முழுதும், 80 சதவீத மக்கள் அலைபேசியை பயன்படுத்தி வருகின்றனர். 4ஜி பயன்பாட்டை அதிகரிக்க மத்திய அரசு முன்னுரிமை அளித்து வருகிறது. முதல்முறையாக உள்நாட்டு தொழில்நுட்பத்துடன் 4ஜி தொழில்நுட்பத்தை நம் நாட்டில் உருவாக்கியுள்ளோம். இதன் வாயிலாக நாட்டில் 100 சதவீத கவரேஜை ஏற்படுத்த முடியும்.
வடகிழக்கு மாநிலங்களின் பலம் மற்றும் திறன்களின் அடிப்படையில் வளர்ச்சிக்கான உத்தியை உருவாக்குவோம். இது தொடர்பாக, சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுடன் கலந்து பேசி முடிவு எடுக்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.